Published : 09 Jul 2020 07:25 AM
Last Updated : 09 Jul 2020 07:25 AM

வணிக நிறுவன பிரதிநிதிகளுடன் மாநகராட்சி இன்று ஆலோசனை

சென்னை மாநகராட்சி ஆணையர்கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

தொழில் நிறுவனங்கள், வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகள், காய்கறி, மளிகை கடைகள், சலூன் கடைகள், மீன் இறைச்சி அங்காடிகள் மற்றும் வங்கிகள் தகுந்த பாதுகாப்புடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்சொன்ன இடங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை ஒழுங்குபடுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விழிப்புணர்வு, ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி 9, 10, 11 ஆகிய தேதிகளில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் தொழில்நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின்பிரதிநிதிகள் கலந்துகொள்ள வேண்டிய நாள், நேரம் குறித்துகடிதம் வாயிலாக தெரிவிக்கப்படும்.

எனவே, கடிதம் பெறப்பட்ட நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் தங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x