Published : 06 Jul 2020 07:21 AM
Last Updated : 06 Jul 2020 07:21 AM
சென்னை: சென்னையில் நேற்று ஒரேநாளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 1,052 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை பெருநகரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக நேற்று 1,564 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 998 இருசக்கர வாகனங்கள், 15 ஆட்டோக்கள் மற்றும் 39 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 1,052 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது 683 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர இதுவரை, அவசரப் பணிகளுக்கு பயன்படுத்துவதாக கூறி அவர்களாகவே (போலியாக) அனுமதிச் சீட்டு ஒட்டி வந்ததாக 125 பேர் பிடிபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT