Published : 20 Aug 2015 08:25 AM
Last Updated : 20 Aug 2015 08:25 AM

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பதவியில் 117 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 15.2.2015 அன்றும், உதவி வேளாண் அலுவலர் பணியில் 417 காலியிடங்களை நிரப்புவதற்காக 18.4.2015 அன்றும் எழுத்துத்தேர்வுகள் நடத்தப்பட்டன.

எழுத்துத்தேர்விலிருந்து அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப் புக்கு தற்காலிகமாக தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்ப தாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 24-ம் தேதியும், உதவி வேளாண் அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 7-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையும் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x