Published : 24 Aug 2015 09:14 AM
Last Updated : 24 Aug 2015 09:14 AM

தமிழகத்தில் மழை தொடரும்

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் 11 செ.மீ., திருவள்ளூர், தருமபுரி மாவட்டம் அரூரில் 7 செ.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவாரூர் மாவட்டம் கொடவாசல் ஆகிய இடங்களில் 6 செ.மீ., சேலம் மாவட்டம் ஓமலூர், அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டான், கடலூர் மாவட்டம் சிதம்பரம், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, வேலூர் ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை நேற்று முன் தினம் பெய்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 36.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியிருந்தது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட் டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x