Published : 02 Feb 2020 07:00 AM
Last Updated : 02 Feb 2020 07:00 AM
எல்ஐசியை தனியார்மயமாக்குவது என மத்திய அரசு அறிவித்திருப்பதை கண்டித்து பிப்ரவரி 4-ம் தேதி அகில இந்திய அளவில் இன்சூரன்ஸ் ஊழியர்கள், ஒரு மணி நேர வெளிநடப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுதொடர்பாக அகில இந்தியஇன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்கூட்டமைப்பு பொதுச்செயலர் த.செந்தில்குமார் வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
எல்ஐசி கடந்த நிதியாண்டில் டிவிடெண்டாக மட்டும் அரசுக்கு ரூ.2 ஆயிரத்து 611 கோடி கொடுத்துள்ளது. 11-வது ஐந்தாண்டு (2012-17) திட்டத்துக்கு எல்ஐசியின் பங்களிப்பு ரூ.14 லட்சத்து 23 ஆயிரத்து 55 கோடிகள். சராசரியாக ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து84 ஆயிரம் கோடிகள் வழங்கப்படுகி றது. 12-வது நிதியாண்டின் முதல் இரு ஆண்டுகளிலேயே அரசுக்குரூ.7 லட்சம் கோடி கொடுக்கப் பட்டுள்ளது.
எல்ஐசியின் சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடிகள். பல்வேறுதுறைகள் மற்றும் அரசின் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள தொகை ரூ.28 லட்சத்து 84 ஆயிரத்து 331 கோடிகள். 40 கோடி பாலிசிகளை இன்று எல்ஐசி வைத்துள்ளது. இவ்வளவு பாலிசிகளை வைத்துள்ள உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை எல்ஐசி பெற்றுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1000 கோடி மட்டுமே இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடாக வந்துள்ளது. ஆனால் எல்ஐசி ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடியை கொடுக்கிறது.
இந்நிலையில் எல்ஐசி தனியார் மயம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது மக்கள் விரோத செயல். அது தேச நலனுக்கு எதிரானது. இதைக் கண்டித்து பிப்ரவரி 4-ம் தேதி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நாடு தழுவிய 1 மணி நேர வெளிநடப்பு வேலைநிறுத்தம் நடத்துவது என அறிவித்துள்ளது. அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால் போராட்டங்கள் தீவிரப் படுத்தப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT