Published : 31 Jan 2020 12:22 PM
Last Updated : 31 Jan 2020 12:22 PM
சுகாதாரத் துறையில் வாடிக்கையாளர் சேவை & புகார்களைக் கையாளுதல் குறித்த பயிலரங்கு சென்னையில் உள்ள பாம்குரோவ் ஹோட்டலில் நாளை (பிப்ரவரி 1) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து டுவின்டெக் அகாடமியின் இயக்குநர் அ. மகாலிங்கம் வெளியிட்ட தகவல்:
வாடிக்கையாளர் சேவை எந்த ஒரு சேவை நிறுவனத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதன் மூலமே ஒரு நிறுவனம் வாடிக்கையாளர் சேவைத் திறன், கூர்மை மற்றும் வாடிக்கையாளர்களைக் கையாள்வதில் நமது திறனை, நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியும். மேலும், தலைசிறந்த வாடிக்கையாளர் சேவை என்பது சிறந்த மார்க்கெட்டிங் உத்தியும் ஆகும்.
இதனைக் கருத்தில்கொண்டே டுவின்டெக் ஹெல்த்கேர் அகாடமி “சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர் புகார்களைக் கையாளுதல்” என்ற சிறப்புப் பயிலரங்கினை ஏற்பாடு செய்துள்ளது. வாடிக்கையாளர் சேவை, வாடிக்கையாளர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மற்றும் நல்லெண்ணங்களை மேம்படுத்துவதற்கும் உதவி செய்யும் வகையில் இந்தப் பயிலரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுகாதார வாடிக்கையாளர் சேவை பயிலரங்கின் முக்கிய நோக்கங்கள்:
இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்வதன் மூலம் வாடிக்கையாளர் சேவையில் ஈடுபடுபவர்கள் கீழ்க்காணும் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளலாம்.
1. வாடிக்கையாளர் சேவையின்போது அழுத்தம் அதிகரிக்கும் வேளையில் அமைதியாக மற்றும் நம்பிக்கையோடு இருப்பதால் ஏற்படும் விளைவுக்ள்.
2. சேவை பெற வந்திருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் உடன் பணியாற்றும் உள் வாடிக்கையாளர்கள் வெளிப்படுத்தும் கோபம், அழுத்தத்தை வெளிப்படுத்தும் வாடிக்கையாளர்களைக் கையாளும் முறை.
3. வாடிக்கையாளர்களுக்கு கனிவான முறையில் பதில் கூறும் முறை.
4. வாடிக்கையாளர்களின் குற்றச்சாட்டுகளைவிட அவர்களுடைய பிரச்சினைக்ளுக்குத் தீர்வு காண்பதே அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுதல்.
5. வாடிக்கையாளரின் அனுபவங்கள் மறக்க முடியாத ஒன்று என்பதை புரிந்து செயல்படுதல்.
6. வாடிக்கையாளர் சேவை என்பது ஒரு சங்கிலித்தொடர் என்ற புரிதல் உணர்வை மேம்படுத்துவது.
இந்தப் பயிலரங்கு கீழ்க்கண்ட சுகாதார சேவைகளில் உள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
· வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள்,
· வரவேற்பரை பணியாளர்கள்
· வாடிக்கையாளர்களுக்கு உதவிசெய்யும் பணியாளர்கள்,
· கட்டணங்கள் வசூலிக்கும் கேஷியர்கள் மற்றும் அது சார்ந்த பணியாளர்கள்
. பயிலரங்கின் விவாதிக்கப்படும் சிறப்பு பாடங்கள்
· சிறந்த சேவை வழங்க வேண்டிய அவசியம்.
· வாடிக்கையாளர் சேவை தரநிலைகள் மற்றும் இலக்குகள்
· வாடிக்கையாளர் தொடர்புக்கலை
· வாடிக்கையாளர்களுக்கு "உபசரிப்பு" கொடுங்கள்
· ‘வாடிக்கையாளர் மற்றும் விருந்தினர் சூத்திரம்’ என்பது என்ன? அதனை எவ்வாறு பயன்படுத்துவது?
· வாடிக்கையாளர் சேவை என்பது ஒரு சங்கிலித்தொடர்.
· வாடிக்கையாளர் தேவையை புரிந்து கொள்வது.
· வாடிக்கையாளர்களை வகைப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள்.
· வாடிக்கையாளரின் பிரச்சினைகளில் இருந்து திறமையான உத்திகளை உருவாக்குவது.
· சிறந்த வாடிக்கையாளர் சேவை மூலம் உங்கள் நிறுவனத்தை வாடிக்கையாளரின் முதல் தேர்வாக மாற்றுவது.
இவ்வாறு அ.மகாலிங்கம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT