Published : 20 Aug 2015 08:11 AM
Last Updated : 20 Aug 2015 08:11 AM

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது பண மோசடி புகார்

தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் வாடகை பணத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மோசடி செய்வதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.

சென்னை அசோக்நகரை சேர்ந்த வளர்மதி(50) என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான தேனாம்பேட்டை காமராஜர் அரங் கத்தில் நான் தொலைபேசி உதவி யாளராக இருந்தேன். அப்போது அரங்கத்தின் வாடகை மற்றும் கடை கள் வாடகை கணக்கு விவரங் களை நான் கவனித்தேன். இதில் காமராஜர் அரங்கத்தின் நிர்வாகி ஒருவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனும் சேர்ந்து வாடகை பணத்தை கட்சி கணக்கில் சேர்க்கா மல், மோசடி செய்து அபகரித்தனர்.

இதுகுறித்து கேட்ட என்னை இருவரும் சேர்ந்து மிரட்டுகின்றனர். கட்சி பணத்தை மோசடி செய்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x