Published : 31 Dec 2019 07:17 PM
Last Updated : 31 Dec 2019 07:17 PM

ஜன.6-ம் தேதி சென்னையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

வரும் ஜனவரி 6-ம் தேதி அன்று சென்னையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 6-ம் தேதி அன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்தச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பட்ஜெட் தொடராகத் தொடர்ந்து நடக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிரொலிக்கும்.

கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜனவரொ 6 -ம் தேதி அன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் என திமுக கொறடா சக்ரபாணி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல், குடியுரிமைச் சட்டம், என்.ஆர்.சி, இலங்கைத் தமிழர்களுக்கான இரட்டைக் குடியுரிமை, எழுவர் விடுதலை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் திமுக எம்எல்ஏக்கள் செயல்படுவது குறித்து ஆலோசனை வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x