Published : 02 May 2014 09:17 AM
Last Updated : 02 May 2014 09:17 AM
ரயில் குண்டுவெடிப்பில் பலியான வரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உடனடி நிவாரணமாக வழங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வியாழக் கிழமை வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:
பெங்களூரில் இருந்து (வண்டி எண். 12509) குவாஹாட்டி செல்லும் விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 7.15 மணிக்கு வந்து சேர்ந் தது. அப்போது திடீரென குண்டு வெடித்ததில் எஸ்-3, எஸ்-4, எஸ்-5 ஆகிய பெட்டிகள் சேதமடைந்தன. இதில் ஸ்வாதி (24) என்ற பெண் பயணி பலியானார். சுமந்தோ தேவ்நாத் (37) என்பவரும் அடை யாளம் தெரியாத இன்னொரு வரும் படுகாயம் அடைந்துள்ள னர். 12 பேர் லேசான காயங்களு டன் உயிர் தப்பினர்.காயமடைந் தவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டுள்ளனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத் தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது. மற்ற வண்டிகள் வழக்க மான நேரங்களில் செல்கின்றன.
குண்டுவெடிப்பில் பலியான வர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம், லேசாக காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உடனடி நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் விவரம்:
ஷைபுல் ஹக்யூ (27), ஆஞ்சனேயா(29), விமல்குமார் தாஸ் (43), ஷஹுன் குமார் ராய் (23), அல்டாப் கான் (17), ஜிதேந்திர மொகந்தோ தேகா (58), சாரி (21), முரளி (27), பிஜாய் குமார் (14), சுதந்சந்த் தேவ்நாத் (64), சுரேந்திர வர்மா (31), உமா (35).
முன்பதிவு பட்டியலில் இருந்து இவர்களது பெயர் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. காயமடைந்த வர்களுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலியான ஸ்வாதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட் டுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT