Published : 26 May 2014 09:14 AM
Last Updated : 26 May 2014 09:14 AM

சீனப்பட்டாசு விற்பதை தடுக்க நூதன பரிசுத்திட்டம்: சுவரொட்டிகளால் சிவகாசி, விருதுநகரில் பரபரப்பு

ஒரு கண்டெய்னர் சீனப்பட்டாசு களைக் கண்டுபிடித்துக் கொடுத் தால் ரூ.10 லட்சம் பரிசு என அறி வித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி களால் சிவகாசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியில் கணேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் சீனப்பட்டாசுகள் விற்பனை செய் யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு நாட்டிலேயே முதன்முறையாக சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சீனப் பட்டாசுக்கள் விற்பனையை தடுக்கும் வகையில் ஒரு கண்டெய்னரை பிடித்துக் கொடுப்போருக்கு ரூ.10 லட்சம் பரிசு என தமிழ்நாடு பட்டாசுத் தொழில் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சீனப்பட்டாசு ஒரு லாரி பிடித்துக் கொடுத்தால் ரூ.5 லட்சமும், ஒரு வேன் பிடித்துக் கொடுத்தால் ரூ.2 லட்சமும், தொழிற்சாலையில் உற்பத்தி செய்து முடிக்காமல் இறக்குமதி செய்து பினிசிங் செய்யும்போது பிடித்துக்கொடுத்தால் ரூ.5 லட்ச மும், பட்டாசுக் கடைகளில் இருக் கும் சரக்குகளைப் பிடித்துக் கொடுத்தால் அதன் மதிப்பில் 50 சதவிகிதம் அல்லது ரூ.25 ஆயிரமும் ரொக்கப் பரிசு கொடுப்பதாகவும் அந்த சுவரொட்டியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டாசுத் தொழில் தொழிலாளர் பாதுகாப்பு சங்கப் பொருளாளர் டி.மாரிமுத்து கூறுகையில், ‘சீனப் பட்டாசுகளால் சிவகாசி பட்டாசுத் தொழில் நலிவடைகிறது. இதனால், இத்தொழிலை நம்பியுள்ள 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படு கிறது. இதில் அரசு தலையிட்டு சீனப்பட்டாசுகளுக்கு முழுமை யான தடை விதித்தால்தான் சிவகாசி பட்டாசுத் தொழிலும் அதை நம்பியிருக்கும் தொழிலாளர் வாழ்வும் வளம் பெருகும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x