Published : 26 Apr 2014 12:41 PM
Last Updated : 26 Apr 2014 12:41 PM
தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்கிறார். அவர், சில வாரங்கள் அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்வார்.
16-வது மக்களவை தேர்தலை ஒட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த 24-ம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், ஜெயலலிதா நாளை கொடநாடு செல்கிறார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்: "தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்து 27.4.2014 அன்று நீலகிரி மாவட்டம் கொடநாட்டிற்கு புறப்பட்டுச் செல்கிறார். சில நாட்கள் அங்கு தங்கி, அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்வார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT