Published : 07 Nov 2014 01:50 PM
Last Updated : 07 Nov 2014 01:50 PM
ஸ்ரீபெரும்புதூரில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட 23 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் பவணந்தி கூறியதாவது: பெரும்புதூர் பகுதிகளில் உள்ள கடைகளில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பெரும்புதூர் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடைகளில், மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் காஞ்சிபுரம் தனி வட்டாட்சியர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், கடைகளில் பயன் படுத்தப்பட்ட 23 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன . பறிமுதல் செய்யப்பட்ட காஸ் சிலிண்டர்கள், எச்.பி., காஸ் ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT