Published : 06 Jul 2017 08:47 AM
Last Updated : 06 Jul 2017 08:47 AM

பாடத்திட்டத்தில் காமராஜர் வரலாறு? - அமைச்சர் பதில்

தமிழக மக்களின் நெஞ்சங் களில் வாழும் காமராஜரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்க என்ன செய்வது என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித் துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் இன்பதுரை (ராதாபுரம்), ‘‘கல்விக் கண் திறந்த காமராஜரின் வாழ்க்கை வரலாறு பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுமா?’’ என துணை கேள்வி எழுப்பினார்.

மகத்தான தலைவர்

அதற்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் அதிகமான பள்ளி களை திறந்து, தமிழக மக்களின் நெஞ்சங்களில் நிறைந்து வாழும் மகத்தான தலைவர் காமராஜர். அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் என்ன செய்வது என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x