Published : 20 Jun 2017 09:09 AM
Last Updated : 20 Jun 2017 09:09 AM

திருச்சியில் ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனியார் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவில் மலேசியாவுக்கு புறப்படத் தயாராக இருந்தது.

அதில் பயணம் செய்ய வந்த மதுரையைச் சேர்ந்த கோவிந்தமூர்த்தியிடம் 5 கிலோ எடையுள்ள போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கோவிந்தமூர்த்தியை அதிகாரி கள் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x