Published : 01 May 2014 01:07 PM
Last Updated : 01 May 2014 01:07 PM
ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு தொடர்பாக தற்போதைய சூழலில் எவ்வித பரிசீலினையும் கூடாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருண்குமார் மீது சென்னை யைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். என்னை காதலித்த வருண்குமார் திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் ஐ.பி.எஸ். அதிகாரியாக அவர் தேர்வான பின்னர் வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது.
2 கிலோ தங்கம், 50 லட்சம் ரொக்கம் மற்றும் கார் என பெருமளவில் வரதட்சணை கேட்ட வருண்குமார் மற்றும் அவரது பெற்றோர், இறுதியில் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டனர் என்று தனது புகாரில் பிரியதர்ஷிணி கூறியிருந்தார்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவைச் சேர்ந்த வரதட்சணை ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய் தனர். இந்த வழக்கில் தன்னை போலீஸார் கைது செய்யாத வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வருண்குமார் முன் ஜாமீன் பெற்றிருந்தார். எனினும் அந்த முன் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனையடுத்து சைதாப்பேட் டையில் உள்ள பெருநகர குற்றவி யல் நீதிமன்றத்தில் வருண்குமார் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மனு தள்ளுபடியானதால்...
இந்நிலையில் வருண் குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி கடந்த செவ்வாயன்று தள்ளுபடி செய்தார்.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிய தர்ஷிணி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது புதன்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி டி.எஸ்.சிவஞானம், போலீஸ் காவலில் எடுத்து வருண்குமாரை விசாரிக்க அனுமதி மறுத்த சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
இந்நிலையில், சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் வருண் குமார் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது எவ்வித பரிசீலினையும் கூடாது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT