Published : 19 Aug 2015 08:36 AM
Last Updated : 19 Aug 2015 08:36 AM

இளங்கோவனை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்: பல்வேறு இடங்களில் உருவ பொம்மை எரிப்பு

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் அவரது உருவ பொம் மையை எரித்து அதிமுக வினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறி இளங்கோவனை கண்டித்து நேற்று முன்தினம் இரவு சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பு நவநீதகிருஷ்ணன் எம்.பி. தலைமையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இளங்கோ வன் வீடும் முற்றுகையிடப்பட்டது.

இந்நிலையில், இளங்கோவ னுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நேற்று போராட் டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலு வலகமான சத்தியமூர்த்தி பவன் முன்பு நேற்று நூற்றுக்கணக்கான அதிமுகவினர் திரண்டனர். அவர் களை போலீஸார் தடுத்து நிறுத் தினர். அப்போது இளங்கோவ னின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமூர்த்தி பவன் முற்றுகை

அதிமுகவினரின் போராட்டத் தைத் தொடர்ந்து காங்கிரஸ் மாவட்டச் செயலாளர்கள் ராயபுரம் மனோ (வடசென்னை) ரங்க பாஷ்யம் (மத்திய சென்னை), சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான நிர்வாகிகளும், தொண் டர்களும் சத்தியமூர்த்தி பவனில் குவிந்தனர்.

சத்தியமூர்த்தி பவன் வாயிலில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங் கிரஸ் தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். சத்தியமூர்த்தி பவனிலிருந்து ஜெயலலிதாவின் உருவ பொம்மையுடன் காங்கிரஸ் தொண்டர்கள் வெளியே வருவதும், அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்துவதுமாக பல மணி நேரம் தொடர்ந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், சில காங்கிரஸ் தொண்டர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வெளியே திருவிக சாலையில் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்தனர். போலீ ஸார் விரைந்து சென்று உடனடியாக அதை அணைத்தனர்.

நந்தம்பாக்கம் அருகே மணப் பாக்கத்தில் உள்ள இளங்கோவன் வீடு முன்பு நேற்று காலை திரண்ட நூற்றுக்கணக்கான அதிமுக தொண் டர்கள் அவரது உருவ பொம்மையை எரித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராமன், மாநில எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் இளங் கோவன் வீடு முன்பு திரண்டிருந்தனர்.

கைகலப்பு

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு போலீ ஸார் தடுப்புகள் அமைத்து இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். ஒரு கட்டத்தில் அதிமுக - காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அவர் களை போலீஸார் தடுத்து அப்புறப் படுத்தினர். இதனால் அந்தப் பகுதி யில் சிறிது நேரம் போர்க்களம்போல காட்சி அளித்தது.

தியாகராய நகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை தர்கா, தாம்பரம், குரோம்பேட்டை, சிட்லப்பாக்கம், பல்லாவரம், பெரம்பூர், வியாசர்பாடி என சென்னை மாநகர் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுகவினர் இளங்கோவனின் உருவபொம்மைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களில் அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

சத்தியமூர்த்தி பவன் மற்றும் இளங்கோவன் வீடு முன்பு ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. இதன்படி ஈக்காடு, மண வாள நகர், திருவாலங்காடு ஆகிய பகுதிகளிலும் திருத்தணி மற்றும் ஆர்.கே. பேட்டை, வெங்கல், பொன் னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் இளங் கோவனின் உருவபொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x