Published : 30 Oct 2014 10:10 AM
Last Updated : 30 Oct 2014 10:10 AM

தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் இருந்த அபிஷேக் தீக்ஷித் தமிழ்நாடு கமாண்டோ படை சூப்பிரண்டாக மாற்றப்பட் டுள்ளார்.

இதேபோல் மத்திய அரசுப் பணிக்கு சென்று திரும்பி, கட்டாயக் காத்திருப்பில் இருந்த ஐ.ஜி., அசோக்குமார் பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார் சென்னை ரயில்வே போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணி யாற்றும் கயல்விழி, சீருடைப் பணியாளர் தேர்வாணைய சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x