Published : 12 Oct 2014 10:15 AM
Last Updated : 12 Oct 2014 10:15 AM

செல்போன் பேசியபோது மாடியில் இருந்து விழுந்தவர் பலி

வீட்டின் மொட்டை மாடியில் செல்போன் பேசியபடி நடந்துக் கொண்டிருந்தவர் கீழே விழுந்து பலியானார். சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை சந்திரா நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்தவர் சரவணன் (25). பெயிண்டர். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த இவர், மொட்டை மாடியில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார்.

மாடியில் நடந்துக் கொண்டி ருந்த அவர், தீடிரென்று கால் தவறி கீழே விழுந்துவிட்டார். தலையில் பலத்த காயமடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆயிரம் விளக்கு போலீஸார், சரவணனின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x