Published : 22 Apr 2014 08:35 AM
Last Updated : 22 Apr 2014 08:35 AM
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கில், உச்ச நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் கோரி ஜெயலலிதா, சசிகலா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப் பட்டுள்ளது.
சசி என்டர்பிரைசஸ் நிறுவனத் தின் பங்குதாரர்கள் என்ற முறையில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் 91-ம் ஆண்டு முதல் 94-ம் ஆண்டு வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், கடந்த ஜனவரி 30-ம் தேதி பிறப் பிக்கப்பட்ட உத்தரவில், “வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது தவறு என்று தெரிந்தும் வேண்டு மென்றே தாக்கல் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தெரிந்தே இந்த தவறை செய்ய வில்லை என்பதை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரூபிக்க வேண்டும்” என்று கூறப்பட்டி ருந்தது.
இந்த உத்தரவு, வழக்கை விசாரிக்கும் எழும்பூர் நீதிமன்ற நீதிபதியின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா, சசிகலா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு திங்கள்கிழமை விசார ணைக்கு வந்தபோது, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் வழக்கை தள்ளி வைக்க கோரினார். இதை யடுத்து, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், விக்ரம்ஜித் சிங் ஆகியோர் வழக்கை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர். பிற்பகல் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர் இல்லாத தால், விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT