Published : 18 Apr 2014 10:17 AM
Last Updated : 18 Apr 2014 10:17 AM
காவல் துறையில் வேலைக்குச் சேர்ந்த பின் மாற்று பாலினத்தவர் என மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டவர், உயர் நீதிமன்ற தீர்ப்பால் மீண்டும் பணி வாய்ப்பு பெற்றுள்ளார்.
கடந்த 1989-ம் ஆண்டு அரியலூர் மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறப்புச் சான்றிதழிலும் பெண் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகத்தாலும் அவர் பெண் ணாகவே அங்கீகரிக்கப் பட்டார். பெண்கள் தொடக்கப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கடைசியில் பெண்கள் கல்லூரி யில் சேர்ந்து பயின்ற அவர் மாணவியாகவே வலம் வந்தார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற அவர், ஏராளமான பரிசுகளை வென்றார்.
பின்னர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்வில் பங்கேற்று, அவர் வெற்றி பெற்றார். கடந்த 2011-ம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் அவர் காவலராக பணியில் நியமனம் செய்யப்பட்டார். 2011 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வேலூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சியில் பங்கேற்றார்.
இதற்கிடையே மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுப் பப்பட்டார். அவரை பரிசோ தித்த மருத்துவர்கள், அவர் பிறப் பிலேயே மாற்றுப் பாலினத்தவராக (Transgender) பிறந்துள்ளதாக மருத்துவச் சான்றிதழ் அளித்தனர். இதனையடுத்து பாலினத்தை மறைத்ததாகக் கூறி அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி எஸ்.நாகமுத்து, அவரை பெண்ணாகவே கருதி இரண்டாம் நிலை பெண் காவலர் பணியில் இரண்டு வார காலத்துக்குள் மீண்டும் நியமனம் செய்திட வேண்டும் என்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
மனுதாரர் பெண்ணாகவே பிறந்துள்ளார். சமூகத்தாலும் அவர் பெண்ணாகவே அங்கீகரிக் கப்பட்டுள்ளார். அவரே தன்னை பெண்ணாகத்தான் உணர்ந் துள்ளார். ஆகவே, அவர் பெண் ணாகவே கருதப்பட வேண்டும். பெண் காவலராக பணிபுரிய அவருக்கு உரிமை உள்ளது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT