Published : 19 Nov 2025 06:42 AM
Last Updated : 19 Nov 2025 06:42 AM

சென்னையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக 947 வாக்குச்சாவடிகளில் உதவி மையம்: மக்கள் பங்கேற்று சந்தேகங்களை கேட்டறிந்தனர்

சென்னை நந்தனத்தில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாக்காளர் உதவி மையத்தில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வழிகாட்டுதலுடன் பூர்த்தி செய்து வழங்கினர்.

சென்னை: சென்​னை​யில் உள்ள 947 வாக்​குச்​சாவடிகளில் வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பான வாக்​காளர் உதவி மையம் நேற்று நடை​பெற்​றது. தமிழகம் முழு​வதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், இப்​பணி​களை மேற்​கொள்​வ​தில் பொது​மக்​கள் பல்​வேறு சிரமங்​களை சந்​தித்து வரு​வதை கருத்​தில் கொண்​டு, சென்னை மாநக​ராட்சி சார்​பில், வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பாக வாக்​காளர் உதவி மையம் நவ.18-ம் தேதி முதல் நடத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது.

வாக்​காளர்​களுக்கு ஏற்​படும் சந்​தேகங்​களுக்கு தீர்வு காணும் வகை​யில், இந்த உதவி மையங்​களுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. அதன்​படி, சென்னை மாநகரம் முழு​வதும் வாக்​குச்​சாவடி மையங்​களாக உள்ள பள்​ளி​களில் நேற்று காலை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்​துக்​கான உதவி மையங்​கள் தொடங்கி பணி​கள் நடை​பெற்​றன.

வாக்​குச்​சாவடி நிலைய அலு​வலர்​கள் வாக்​காளர்​களுக்கு கணக்​கீட்டு படிவங்​களை பூர்த்தி செய்​வதற்​கும் உரிய வழி​காட்​டு​தல்​களை​யும், ஆலோ​சனை​களை​யும் வழங்​கினர். பொது​மக்​கள் தங்​களது வாக்​குச்​சாடி மையங்​களாக செயல்​படும் பள்​ளி​களுக்கு காலை முதலே ஆர்​வ​மாக வந்து சந்​தேகங்​களை கேட்​டறிந்​து, படிவங்​களை பூர்த்தி செய்து சென்​றனர்.

சென்​னை​யில் உள்ள 947 வாக்​குச்​சாவடிகளி​லும் இந்த உதவி மையங்​கள் நேற்று நடை​பெற்​றன. தொடர்ந்து நவ.25-ம் தேதி வரை மொத்​தம் 8 நாட்​களுக்கு இந்த உதவி மையங்​கள் நடை​பெற உள்​ளது. இதுதொடர்​பாக, வாக்​குச்​சாவடி அலு​வலர் கூறுகை​யில், “ உதவி மையத்​துக்கு வருபவர்​கள் பெரும்​பாலும் 2005-ம் ஆண்டு வாக்கு எங்கு இருந்​தது என்​பதை பார்த்து சொல்​லு​மாறு கேட்​டனர். அதற்​கான தகவல்​களை சரி​பார்த்து விண்​ணப்​பங்​களை பூர்த்தி செய்து தரு​கிறோம். இந்த உதவி மையத்தை பொது​மக்​கள் பயன்​படுத்​தி கொள்​ள வேண்​டும்​” என்​று தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x