Published : 19 Nov 2025 06:29 AM
Last Updated : 19 Nov 2025 06:29 AM

கோவை மாவட்டத்தில் அதிமுகவை வீழ்த்த வேண்டும்: நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

சட்​டப் பேர​வைத் தேர்​தலில் கோவை மாவட்​டத்​தில் பெரும்​பான்​மை​யான தொகு​தி​களில் வெற்றி பெற வேண்​டுமென முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நிர்​வாகி​களுக்கு உத்​தர​விட்​டார்.

சட்​டப்​பேரவைத் தேர்​தலை முன்​னிட்டு திமுக சார்​பில் ‘உடன்​பிறப்பே வா’ எனும் பெயரில் திமுக நிர்​வாகி​களை தொகுதி வாரி​யாக அறி​வால​யத்​தில் சந்​தித்து பேசி வரு​கி​றார் திமுக தலை​வர் ஸ்டா​லின். இது​வரை 86 தொகு​தி​களின் நிர்​வாகி​களு​டன் ‘ஒன் டு ஒன்’ சந்​தித்து நேரடி ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளார். இந்த சந்​திப்​பின் போது, முன்​வைக்​கப்​படும் குறை​களை சரிசெய்ய திமுக தலைமை உரிய நடவடிக்​கை​களை​யும் எடுத்து வரு​கிறது.

அதன்​படி தொடர்ந்து 40-வது நாளாக நேற்று நடை​பெற்ற நிகழ்​வில் கோவை மாவட்​டத்​தில் சூலூர், கிணத்​துக்​கட​வு, வால்​பாறை ஆகிய தொகு​தி​களின் நிர்​வாகி​களை முதல்​வர் ஸ்டா​லின் சந்​தித்து கலந்​துரை​யாடி​னார். அப்​போது எஸ்​ஐஆர் பணி​கள் குறித்து முதல்​வர் விசா​ரித்​த​போது, “அதி​முக பிஎல்​ஏ2-க்​கள் யாருமே களத்​துக்கே வரு​வ​தில்​லை. நமது நிர்​வாகி​கள் மிக தீவிர​மாக பணி​களை செய்து வரு​கி​றார்​கள்” என நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர்.

அதன்​பின், “கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது கோயம்​புத்​தூர் மாவட்​டத்​தில் உள்ள 10 தொகு​தி​களி​லும் அதி​முக-வே வென்​றது. ஆனால், இந்த முறை நிச்​ச​யம் அதி​முக-வை வீழ்த்தி திமுக வெற்றி பெற வேண்​டும். அரசின் சாதனை​களை தொகுதி முழுக்​க​ விளம்​பரப்​படுத்த வேண்​டும். மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்​களில் தகு​தி​யான​வர்​கள் இருப்​பின் அவர்​கள் உதவித் தொகை பெற கட்​சி​யினர் உதவ வேண்​டும்” என்று மண்​டலப் பொறுப்​பாளர் செந்​தில் பாலாஜிக்​கு, முதல்​வர் ஸ்டா​லின் உத்​தரவிட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x