Published : 18 Nov 2025 06:12 AM
Last Updated : 18 Nov 2025 06:12 AM

மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் தொடர்பாக 2 துறைகள் தாக்கல் செய்த பட்டியலில் வேறுபாடு: ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் சொத்​துகள் தொடர்​பாக அறநிலை​யத் துறை, வரு​வாய்த் துறை தாக்​கல் செய்த பட்டியலில் வேறு​பாடு​கள் இருப்​ப​தால், இரு துறை அதி​காரி​களும் ஆவணங்​கள் அடிப்​படை​யில் கோயில் சொத்​துகளை உறு​திப்​படுத்​து​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் மற்​றும் அதன் உபகோ​யில்​களுக்​குச் சொந்​த​மான சொத்​துகளை மீட்டு முறை​யாகப் பராமரிக்க​வும், மீனாட்​சி​யம்​மன் கோயி​லில் புனரமைப்​புப் பணி​கள் மேற்​கொண்​டு, விரை​வில் குட​முழுக்கு நடத்​தக் கோரி​யும், சேலத்​தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனு ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, கோயில் சொத்​துகள் தொடர்​பாக அறநிலை​யத் துறை​யும், வரு​வாய்த் துறையும் அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

இந்த மனு நீதிப​தி​கள் அனிதா சுமந்த், குமரப்​பன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அறநிலை​யத் துறை, வரு​வாய்த் துறை சார்​பில் மீனாட்​சி​யம்​மன் கோயில் சொத்​துகள் தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டது.

ஆனால், மீனாட்​சி​யம்​மன் கோயில் சொத்​துப் பட்​டியலும், வருவாய்த் துறை சமர்ப்​பித்த சொத்​துப் பட்​டியலும் பொருந்​த​வில்​லை. இந்​தப் பட்​டியலை ஏற்க மறுத்த நீதிப​தி​கள், இரு துறை​களின் பட்​டியல்​களில் தெரிவிக்​கப்​பட்​டுள்ள மீனாட்​சி​யம்​மன் கோயில் சொத்​துகளை அறநிலை​யத் துறை ஆணை​யர், இணை ஆணை​யர், வரு​வாய்த் துறை​யினர் ஆவணங்​களின் அடிப்​படை​யில் சரிபார்த்து உறுதி செய்​ய வேண்​டும். இது தொடர்​பாக நவ. 22-ல் கூட்​டம் நடத்​தி, அதில் எடுக்​கப்​பட்ட முடிவு​கள் குறித்த அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என்று உத்​தர​விட்​டனர்.

மனு​தா​ரர் தரப்​பில், “கோயிலுக்கு வரும் பக்​தர்​களுக்கு உணவு வழங்க யானை மண்​டபம் பகு​தி​யில் உணவு சமைக்​கப்​படு​கிறது” என்று தெரிவிக்​கப்​பட்​டது. அதற்கு நீதிப​தி​கள், “பழமை​யான கோயில்​களின் பழமை மற்​றும் பாரம்​பரி​யம் பாது​காக்​கப்பட வேண்டும்.

கோயி​லில் வணிக நோக்​கில் பக்​தர்​களுக்கு உணவு வழங்​கு​வது உணவகம் நடத்​து​வதைப் போன்​றது​தான். கோயில் புனரமைப்​புப் பணி​கள் யுனெஸ்கோ வழி​காட்​டு​தலின் அடிப்​படை​யில் நடக்​கிறதா என்​பது குறித்து அறநிலை​யத் துறை அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். வி​சா​ரணை நவ.26-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது” என உத்​தர​விட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x