Published : 18 Nov 2025 07:04 AM
Last Updated : 18 Nov 2025 07:04 AM

தமிழகம் உள்ளிட்ட 12 மாநில எஸ்ஐஆர் பணிகள்: மாநில நிர்வாகிகளுடன் கார்கே இன்று ஆலோசனை

சென்னை: தமிழகம் உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் நடை​பெற்று வரும் எஸ்​ஐஆர் பணி​கள் தொடர்​பாக மாநில நிர்​வாகி​களு​டன் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே டெல்​லி​யில் இன்று ஆலோ​சனை நடத்​துகிறார். பிஹார் தேர்​தலில் காங்​கிரஸ் கூட்​டணி படு​தோல்வி அடைந்​துள்​ளது.

இந்​நிலை​யில், நாடு முழு​வதும் காங்​கிரஸின் செயல்​பாடு மற்​றும் 2026-ல் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்ள தமிழகம், புதுச்​சேரி​யில் தேர்​தல் தயார் நிலை குறித்து காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில், பொதுச்​செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், தமிழக பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் ஆகியோ​ருடன் நேற்று முன்​தினம் டெல்​லி​யில் ஆலோ​சனை நடை​பெற்​றது.

அதனைத் தொடர்ந்து 12 மாநிலங்​களில் நடை​பெற்று வரும் எஸ்​ஐஆர் பணி​கள் தொடர்​பாக மாநில தலை​வர்​கள், மேலிட பொறுப்​பாளர்​கள், சட்​டப்​பேரவை காங்​கிரஸ் தலை​வர்​கள் ஆகியோ​ருடன் ஆலோ​சனை நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இக்​கூட்​டம் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில், மக்​களவை காங்​கிரஸ் தலை​வர் ராகுல்​காந்தி முன்​னிலை​யில் இன்று டெல்​லி​யில் நடை​பெற உள்​ளது.

இக்​கூட்​டத்​தில் பிஹாரில் வாக்கு திருட்டு மற்​றும் எஸ்​ஐஆர் பணி​கள் நடை​பெறும் 12 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் தற்​போதைய நிலை, தேர்​தல் ஆணை​யத்​தின் செயல்​பாடு​கள் குறித்து ஆலோ​சிக்க இருப்​ப​தாக கூறப்படுகிறது. இக்​கூட்​டத்​தில் பங்​கேற்க தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை நேற்று சென்​னை​யில் இருந்து டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார்.

முன்​ன​தாக அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எஸ்​ஐஆர் என்​பது பொறுமை​யாக, நீண்ட காலம் செய்ய வேண்​டிய பணி. இந்​தப் பணியை அவசரப்​பட்டு செய்​வ​தால், ஆசிரியர்​கள், அங்​கன்​வாடி பணி​யாளர்​கள் மன உளைச்​சலில் இருக்​கின்​றனர். எனவே சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிந்த பின்​பு, எஸ்​ஐஆர் நடத்​தலாம் என்​பது​தான் காங்​கிரசின் நிலைப்​பாடு.

எஸ்​ஐஆரை எவ்​வாறு நிரப்ப வேண்​டும் என்று பல பிஎல்ஓ அதி​காரி​களுக்கே தெரிய​வில்​லை. 2005-ல் நடந்​ததை இப்​போது கேட்​டால், அதற்​கான தரவு​கள்யாரிடம் இருக்​கிறது? எங்கு போய் கேட்​பது? இதில் மிகப்​பெரிய குழப்​பம் இருக்​கிறது. மக்​களுக்​காகத்​தான் தேர்​தல் ஆணை​யம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x