Published : 18 Nov 2025 06:10 AM
Last Updated : 18 Nov 2025 06:10 AM

தமிழகத்தில் இன்று முதல் நவ.23 வரை கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்​கக் கடலில் நவ. 22-ம் தேதி புதிய காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாகும் நிலை​யில், தமிழகத்​தில் இன்றுமுதல் 23-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை நீடிக்க வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​மேற்கு வங்​கக் கடல் பகு​தி​கள் மற்​றும் அதையொட்​டிய இலங்கை கடலோரப் பகு​தி​களில் காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நில​வு​கிறது. இது இன்று மேற்கு அல்​லது வடமேற்கு திசை​யில் மெது​வாக நகரக்​கூடும்.

மேலும், வரும் 22-ம் தேதி தென்​கிழக்கு வங்​கக் கடல் பகு​தி​களில் ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்​தில் மேற்கு அல்​லது வடமேற்கு திசை​யில் நகர்ந்து மேலும் வலுப்​பெறக்​கூடும். இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (நவ.18) பெரும்​பாலான இடங்​களி​லும், நாளை முதல், வரும் 23-ம் தேதி வரை சில இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

இன்று கன்​னி​யாகுமரி, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, ராம​நாத​புரம், சிவகங்​கை, விருதுநகர், தென்​காசி,தேனி மாவட்​டங்​களி​லும் 19, 20-ம் தேதி​களில் மயி​லாடு​துறை மற்​றும் கடலூர் மாவட்​டங்​களி​லும், 21-ம் தேதி மயி​லாடு​துறை, கடலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்​டு, நாகப்​பட்​டினம் மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

வரும் 22-ம் தேதி திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், சென்​னை, செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், கடலூர், மயி​லாடு​துறை, நாகப்​பட்​டினம், திரு​வாரூர், தஞ்​சாவூர், புதுக்​கோட்​டை, ராம​நாத​புரம், தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களி​லும், 23-ம் தேதி மேற்​கூறிய மாவட்​டங்​கள் மற்​றும் சிவகங்​கை, அரியலூர் மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களி​லும் கனமழை பெய்​யக்​கூடும். சென்னை, புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் இன்று மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வேகத்​தி​ல் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக நாகப்​பட்​டினம் மாவட்​டம் கோடியக்​கரை​யில் 12 செ.மீ.மயி​லாடு​துறை மாவட்​டம் செம்​ப​னார்​கோ​விலில் 9 செ.மீ. ராம​நாத​புரம் மாவட்​டம் தங்​கச்​சிமடத்​தில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x