Published : 17 Nov 2025 06:31 AM
Last Updated : 17 Nov 2025 06:31 AM

அதிமுக ஆர்ப்பாட்டம் நவ.20-க்கு தள்ளிவைப்பு

சென்னை: சென்​னை​யில் இன்று நடை​பெற​விருந்த அதி​முக ஆர்ப்​பாட்​டம் நவ.20-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யில் (SIR) ஆட்சி அதி​காரத்​தைப் பயன்​படுத்தி நிகழ்த்​தப்​படும் பல்​வேறு முறை​கேடு​களுக்கு காரண​மான திமுக அரசுக்கு எதி​ராக இன்று (நவ.17) ஆர்ப்​பாட்​டம் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இன்று கனமழை பெய்​யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறி​வித்​திருப்​ப​தால், இந்த ஆர்ப்​பாட்​டம் நவ.20-ம் தேதிக்​கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, அன்று காலை 10 மணிக்​கு, சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் விளை​யாட்​டரங்​கம் அரு​கில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x