Published : 15 Nov 2025 07:05 AM
Last Updated : 15 Nov 2025 07:05 AM

திருப்போரூர் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்து: பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானி 

மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் நேற்று விபத்துக்கு உள்ளானது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்த விமானியை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்். படங்கள்: எம்.முத்துகணேஷ்

திருப்போரூர்: ​திருப்​போரூர் அருகே இந்​திய விமானப்​படை பயிற்சி விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் விமானி பாராசூட் மூல​மாக குதித்து உயிர் தப்​பி​னார். செங்​கல்​பட்டு மாவட்​டம் தாம்​பரத்​தில் விமானபடை பயிற்சி தளம் உள்​ளது. இங்​கிருந்து நேற்று பிற்​பகல் 2.30 மணி​யள​வில் புறப்​பட்ட பயிற்சி விமானம் திருப்​போரூர் அருகே வானில் பறந்து கொண்​டிருந்​தபோது, விமானத்​தில் திடீரென தொழில்​நுட்பக் கோளாறு ஏற்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

இதனால், விமானி கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் அளித்​து ​விட்​டு, விமானத்தை கீழ்​நோக்கி இறக்க முயற்சி செய்​த​நிலையில், விமானம் கட்​டுப்​பாட்டை இழந்​த​தால் விமானி பாராசூட் மூல​ம் குதித்து உயிர் தப்பினார். பயிற்சி விமானம் புறவழிச் சாலை அருகே உள்ள உப்பளம் பகு​தி​யில் விழுந்து பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது.

அந்த இடத்​தில் இடத்​தில் குடி​யிருப்​போ, கட்​டிடமோ இல்​லாத​தால் பெரிய விபத்து ஏற்​படவில்​லை. தகவல் அறிந்த தாம்​பரம் விமானப்​படைஅ​தி​காரி​கள், மீட்பு குழு​வினர் விரைந்து வந்து மீட்பு பணி​களில் ஈடு​பட்​டனர்.விமானியை, ஹெலி​காப்​டரில் மருத்​து​வ​மனை கொண்டு சென்​றனர். திருப்போரூர் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடுபட்​டனர். இதேபோல் புதுக்கோட்டை அருகே இன்ஜின் கோளாறு காரணமாக தனியார் பயிற்சி விமானம் ஒன்று நேற்று முன்தினம் சாலையில் தரையிறங்
கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x