Published : 15 Nov 2025 06:36 AM
Last Updated : 15 Nov 2025 06:36 AM

பள்ளிகளில் ஆய்வுப் பணிக்கு புதிய செயலி அறிமுகம்

சென்னை: பள்​ளி​களில் ஆய்​வுப் பணி​களை மேம்​படுத்​தும் நோக்​கில் ‘பள்ளிப் பார்​வை-2.0’ எனும் புதிய செயலி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு ஒருங்​கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்​குநரகம் அனுப்​பி​ய சுற்றறிக்கை: தமிழகத்​தில் பள்​ளி​களின் செயல்​பாடு​களைக் கண்காணிக்க ‘பள்​ளிப் பார்​வை’ எனும் செயலி அறி​முகம் செய்​யப்​பட்​டிருந்​தது.

துறை​சார்ந்த அலு​வலர்​கள் பள்ளி ஆய்​வின்​போது வகுப்​பறை கற்​பித்​தல், மாணவர் வரு​கை, கற்​றல் நிலை உள்​ளிட்​ட​வற்றை மைய​மாக கொண்டு இந்த செயலி​யில் குறிப்​பு​களை பதிவேற்​றம் செய்​து ​வந்​தனர்.

தற்​போது அதை மேம்​படுத்தி ‘பள்​ளிப் பார்​வை-2.0’ செயலி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதில், 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களில் திறன் இயக்​கத்​தில் பயிற்சி பெறு​பவர்​களுக்கு மட்​டுமே இனி மதிப்​பீடு​கள் மேற்​கொள்​ளப்​படும். அதே போல, அலு​வலர்​கள் பள்​ளிகளில் ஆய்வு செய்​யும்​போது குறைந்​தது 2 மாணவர்​களின் நோட்​டுப் புத்​தகங்​களை​யா​வது கட்​டா​யம் சரி​பார்க்க வேண்​டும்.

ஆய்​வுப் பணி​களை திறம்பட செய்​ய​வும், முழு​மை​யான மதிப்​பீட்டை உறுதி செய்​ய​வும் அனைத்து அலு​வலர்​களும் இந்த புதிய செயலியை பயன்​படுத்த வேண்​டும். இதை பிளே ஸ்டோரில் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x