Published : 14 Nov 2025 05:22 AM
Last Updated : 14 Nov 2025 05:22 AM

ரயில்வே உணவகங்களில் குறைகளை தெரிவிக்க புதிய வசதி

சென்னை: ‘ரயில் மதத்’ செயலி​யுடன் இணைந்து சென்னை ரயில்வே கோட்​டம் ‘க்​யூஆர் கோடு’ வாயி​லாக புகார் தெரிவிக்​கும் வசதியை அறி​முகம் செய்​துள்​ளது. இதன்​மூலம் ரயில்வே உணவகங்​கள் குறித்த கருத்​துகள், ஆலோ​சனை​கள், புகார்களை பயணிகள் பதிவு செய்​ய​லாம். உணவகங்​களில் அதிக கட்​ட​ணம், சேவைக் குறை​பாடு, உணவின் தரம், அளவு, உணவு, தண்​ணீர் கிடைக்​காதது, சுகா​தார நிலை உள்​ளிட்ட விவரங்​களை இதில் பதிவிடலாம்.

ரயில் நிலைய உணவகங்​களில் உள்ள க்யூஆர் குறி​யீட்டை பயணி​கள் தங்​களது செல்​போனில் ஸ்கேன் செய்ய வேண்​டும். அதில், உணவகத்​தின் இருப்​பிடம், நிலை​யக் குறி​யீடு போன்ற விவரங்​கள் இருக்​கும். அதை உறு​தி​செய்த பிறகு, ‘ரயில் மதத்’ செயலிக்​குள் செல்​போன் எண்​ணைப் பதி​விட்​டு, ஓடிபி வந்​ததும் புகார்​களை பதிவிட வேண்​டும். அதன்​பிறகு, குறிப்பு எண்​ணுடன் புகாருக்​கான ஒப்​பு​கைச்​சீட்​டு, ரயில் செயலி​யில் அனுப்பி வைக்​கப்​படும். புகார்​களை உடனுக்​குடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்​கப்​படும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x