Published : 14 Nov 2025 05:42 AM
Last Updated : 14 Nov 2025 05:42 AM

ரூ.240 கோடியில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம்: மேயர் பிரியா தகவல்

சென்னை: தமிழக அரசு சார்​பில், ரூ.240 கோடி​யில் 30 இடங்​களில் முதல்​வர் படைப்​பகங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​வ​தாக, மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரியா தெரி​வித்​துள்​ளார். சென்னை மாநக​ராட்​சி, திரு.​வி.க. நகர் மண்​டலம், 74-வது வார்டு சுப்​பு​ராயன் தெரு​வில் சிஎம்​டிஏ சார்​பில் புதி​ய​தாக கட்​டப்​பட்டு வரும் முதல்​வர் படைப்​பகக் கட்​டிட பணி​களை இந்து சமயம் மற்​றும் அறநிலை​யத்​துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு ஆய்வு செய்​தார்.

இதனைத் தொடர்ந்​து, பாஷி​யம் 2-வது தெரு​வில் மாநக​ராட்சி சார்​பில், இந்து சமய அறநிலை​யத்​துறை இடத்​தில் புதி​தாக கட்​டப்​பட்டு வரும் பல்​நோக்கு மையம் கட்​டிடப் பணி, சந்​திரயோகி சமாதி சாலை சந்​திப்​பு, கிருஷ்ண​தாஸ் சாலை​யில் சிஎம்​டிஏ சார்​பில், புதி​தாக கட்​டப்​பட்டு வரும் முதல்​வர் படைப்​பகம் கட்​டிடப் பணி​களை நேரில் பார்​வை​யிட்​டு, பணி​களை விரைந்து முடிக்க அலுவலர்​களுக்கு உத்​தர​விட்​டார்.

இந்த ஆய்​வு​களின் போது, உடன் இருந்த மேயர் ஆர்​.பிரியா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கொளத்​தூர் தொகு​தி​யில் முதலில் முதல்​வர் படைப்​பகம் திறக்​கப்​பட்​டது. இது பல்​வேறு பகு​தி​களை சேர்ந்த மாணவர்​கள் வர சிரம​மாக உள்​ளது. அதனால், முதல்​வர் ஸ்டா​லின் ரூ.240 கோடி​யில் 30 இடங்​களில் முதல்​வர் படைப்​பகங்​களை கட்ட நடவடிக்கை எடுத்​துள்​ளார்.

தற்​போது, 3 இடங்​களில் பணி​கள் முடிக்​கப்​பட்​டு, மக்​கள் பயன்​பாட்​டில் உள்​ளது. 27 இடங்​களில் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. மாணவர்​கள் நீட் மற்​றும் போட்​டித் தேர்​வு​களுக்கு தயா​ராவதற்​கான அனைத்து வசதி​களும் இங்கு இருக்​கும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்த ஆய்​வின்​போது, தாயகம் கவி எம்​எல்ஏ, சிஎம்​டிஏ உறுப்​பினர் செயலர் கோ.பிர​காஷ், முதன்மை செயல் அலுவலர் சிவ​ஞானம், இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர் பி.என்​.தர், மத்​திய வட்​டார துணை ஆணை​யர் எச்​.ஆர்​.க​வுசிக் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x