Published : 14 Nov 2025 06:55 AM
Last Updated : 14 Nov 2025 06:55 AM

ராமதாஸின் உழைப்பை திருடுகிறார்: அன்புமணி மீது பாமக எம்எல்ஏ பாய்ச்சல்

​ரா​ம​தாஸின் உழைப்பை அன்​புமணி திருடு​வதை ஏற்க முடி​யாது என்​றும் அன்புமணி​யிடம் தலைமை சென்ற பின்​னர் தான் தேர்​தலில் பாமக படு​தோல்​வியை சந்​தித்​தது எனவும் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்​எல்ஏ அருள் விமர்​சித்துள்​ளார்.

இதுதொடர்​பாக சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பாமக எம்​எல்ஏ அருள் கூறிய​தாவது: பாமக தொடங்​கிய​தில் இருந்து கட்​சி​யின் நிறு​வனர் ராம​தாஸ் தலை​மை​யில் ஒவ்​வொரு தேர்​தலை​யும் எதிர்​கொண்​டோம். கடந்த 2006-ம் ஆண்டு வரை​யில் பாமக-​வில் யார் தலை​யீடும் இல்​லாத​தால் பலர் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களாக​வும், மக்​களவை உறுப்​பினர்​களாக​வும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர்.

பாமக தொடங்​கிய காலத்​தி​லிருந்து இது​வரை 55 சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள், 17 மக்​களவை உறுப்​பினர்​கள், 5 அமைச்​சர் பதவி​கள் பெற்​றதற்கு முழு முதற்​காரணம் பாமக நிறு​வனர் ராம​தாஸ் என்​ப​தால் இதற்கு யாரும் உரிமை கொண்​டாட முடி​யாது. அன்​புமணி தலை​மை​யில் போட்​டி​யிட்ட போது தான் கட்சி அங்​கீ​காரத்தை இழந்​தோம். பாமக தலைமை அன்​புமணி​யிடம் சென்ற பின்​னர் தான் தேர்​தலில் கட்சி படு​தோல்​வியை சந்​தித்​தது.

இது​போன்ற சூழ்​நிலை​யில், தற்​போது, பாமக-​வின் மாம்பழ சின்​னத்​தை​யும், ஏ, பி படிவத்​தில் கையொப்​பமிடும் உரிமை​யும் தனக்கு தான் இருப்​ப​தாக அன்​புமணி கூறுகி​றார். சின்​னத்​தை​யும், ஏ,பி படிவத்​தை​யும் அன்​புமணி உரிமை கொண்​டாடு​வது பாமக நிறு​வனர் ராம​தாஸ் உழைப்பை திருடு​வதற்கு சமமானது. மகன் என்​ப​தால் ராம​தாஸின் உழைப்பை அன்​புமணி திருடு​வதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது. அன்​புமணி குறிப்​பிடும் தீயசக்​தி, கைக்​கூலிகள் யார் என்​றால், வழக்​கறிஞர் பாலு போன்ற நபர்​கள் தான். இவர்​கள் வில​கி​னால் பாமக-​வில் நில​வும் பிரச்​சினை​கள் தீர்ந்​து​விடும்” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x