Published : 14 Nov 2025 05:51 AM
Last Updated : 14 Nov 2025 05:51 AM

அரிச்சல்முனை பகுதியில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம்

தனுஷ்கோடி அரிச்சல்முனையில் நடைபெற்ற வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றோர்.

ராமேசுவரம்: தனுஷ்கோடி அரிச்​சல்​முனை பகு​தி​யில் ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு விழா கொண்​டாட்​டம் தேசிய மாணவர் படை​யின் (என்​சிசி) காரைக்​குடி அணி சார்​பில் நேற்று நடை​பெற்​றது. நாட்​டின் தேசி​யப் பாடலான வந்தே மாதரத்​தின் 150-வது ஆண்டு விழா கொண்​டாட்​டத்​தில், பொது​மக்​கள், மாணவர்​கள், இளைஞர்​கள் அனை​வரும் ஆர்​வத்​துடன் கலந்து கொள்​ளு​மாறு, பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு விடுத்​திருந்தார்.

அதன்​படி, ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி அரிச்​சல்​முனை​யில் வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா கொண்​டாட்​டம் தேசிய மாணவர் படை​யின் காரைக்​குடி அணி சார்​பில் நடை​பெற்​றது. என்​சிசி திருச்சி குழு தளபதி கர்​னல் வை.​விஜய்​கு​மார் தலைமை வகித்​தார்.

ராமேசுவரம் அரசு உயர்​நிலைப் பள்​ளி, மரைக்​காயர்​பட்​டினம் கேந்​திரிய வித்​யால​யா, அமிர்தா வித்​யால​யம், காரைக்​குடி செட்​டி​நாடு பொதுப்​பள்​ளி, மதுரை லேடி டோக் கல்​லூரி ஆகிய கல்வி நிறு​வனங்​களைச் சார்ந்த மாணவ, மாணவி​கள் கலந்​து​கொண்டனர்.

மேலும், கடற்​படை, கடலோரக் காவல்​படை, தமிழக காவல் துறை​யினர் ஆகியோர் விழா​வில் அணி வகுத்​தனர். விழா​வின் நிறைவாக அனை​வரும் சேர்ந்து வந்தே மாதரம் பாடலைபாடினர். இந்த நிகழ்ச்​சி​யை, ராமேசுவரம் அரசு மேல்​நிலைப் பள்ளி என்​சிசி அலு​வலர் பழனிசாமி ஒருங்​கிணைத்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x