Published : 13 Nov 2025 05:58 AM
Last Updated : 13 Nov 2025 05:58 AM

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம்

ஏயுடி, மூட்டா அமைப்புகள் சார்பில், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி ஆணையர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: பணி மேம்​பாட்டு ஊதி​யம் உள்பட 10 அம்ச கோரிக்​கைகளை, அரசு உதவி​பெறும் கல்​லூரி​களின் ஆசிரியர்​கள் 3 நாள் தொடர் காத்​திருப்பு போராட்​டத்தை தொடங்​கினர். பல்​கலைக்​கழக ஆசிரியர் சங்​கம் (ஏயுடி) மற்​றும் மதுரை காம​ராஜர், மனோன்​மணீ​யம் சுந்​தர​னார், அன்னை தெரசா மற்​றும் அழகப்பா பல்​கலைக்​கழக ஆசிரியர் சங்​கம் (மூட்​டா) சார்​பில், அரசு உதவி​பெறும் கல்​லூரி ஆசிரியர்​களின் 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, 3 தொடர் காத்​திருப்பு போராட்​டம் சென்னை சைதாப்​பேட்​டை​யில் உள்ள கல்​லூரி கல்வி ஆணை​யர் அலு​வல​கம் முன்பு நேற்று தொடங்​கியது.

அரசு நிதி​யுதவி பெறும் கல்​லூரி ஆசிரியர்​களுக்கு பணி மேம்​பாட்டு திட்ட (சிஏஎஸ்) ஊதி​யம் மற்​றும்அதற்குரிய நிலு​வைத் தொகையை உடனடி​யாக வழங்​கு​வது, யுஜிசி நெறி​முறை​களின்​படி கல்​லூரி ஆசிரியர்​களுக்கு எம்ஃபில் மற்​றும் பிஎச்டி பட்​டத்​துக்​கான ஊக்க ஊதி​யம் வழங்​கு​வது, அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வது உள்பட 10 கோரிக்​கைகளை நிறைவேற்​றக் கோரி, இந்த தொடர் போராட்​டம் நடத்​தப்​படு​கிறது.

ஏயுடி தலை​வர் பேராசிரியர் ஜெ.​காந்​தி​ராஜ் தலை​மை​யுரை ஆற்​றிப் பேசும் போது, “அரசு உதவி பெறும் கல்​லூரி ஆசிரியர்​கள் தங்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, கடந்த 4 ஆண்​டு​களாக போராடி வரு​கின்​றனர். ஆனாலும், அரசு எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​காமல் மவுன​மாக இருந்து வரு​கிறது. தற்​போது நடை​பெறும் 3 நாள் தொடர் போராட்​டத்​துக்​குப் பின்​னரும் அரசு நடவடிக்கை ஏதும் எடுக்​கா​விட்​டால், அடுத்த கட்​ட​மாக டிச. 8-ம் தேதி முதல் கால​வரையற்ற போராட்​ட​மும், அதைத் தொடர்ந்து மாணவர்​களை ஈடு​படுத்தி போராட்​ட​மும் நடத்​தப்​படும்” என்​றார்.

போராட்​டத்​துக்கு ஆதரவு: இதற்​கிடையே, தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள அரசு உதவி​பெறும் கல்​லூரி ஆசிரியர்​களுக்கு, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் சண்​முகம், நாம் தமிழர்கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் ஆகியோர் ஆதரவு தெரி​வித்​துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x