Published : 13 Nov 2025 06:00 AM
Last Updated : 13 Nov 2025 06:00 AM

29,000 தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில் பணிபுரி​யும் தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு இலவச உணவு வழங்​கும் திட்​டத்தை தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்​கிறார். சென்னை மாநக​ராட்​சி​யில் பணிபுரி​யும் தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு 3 வேளை​யும் உணவு வழங்​கும் புதிய திட்​டத்தை முதல்​வர் அறி​வித்​தார். சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில் பணிபுரி​யும் 29,000 தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு இத்​திட்​டத்​தின் கீழ் உணவு இலவச​மாக வழங்​கப்பட உள்​ளது.

550 இடங்​களில் உணவு வழங்​க​வும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்​கிறார். இத்​திட்​டத்​துக்​கான விரி​வான ஏற்​பாடு​களை மாநக​ராட்சி நிர்​வாகம் செய்து வரு​கிறது.

இதற்​கிடை​யில், இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு, மேயர் ஆர்​.பிரியா ஆகியோர் துறை​முகம் தொகு​திக்கு உட்​பட்ட வால்​டாக்ஸ் சாலை​யில் புதி​தாகக் கட்​டப்​பட்டு வரும் சமு​தாயக் கூடத்தை நேற்று ஆய்வு செய்​தனர்.

பின்​னர் மாநக​ராட்சி மேயர் பிரியா கூறியது: சென்னை மாநக​ராட்சி பள்​ளிக் கட்​டிடங்​கள் மேம்​படுத்​தப்​படு​கின்​றன. இதே​போல, சமு​தாய நலக்​கூடங்​களை மேம்​படுத்த வேண்​டுமென மக்​கள் கோரிக்கை வைத்​தனர். அதன்​படி துறை​முகம் பகு​தி​யில் கார், இருசக்கர வாக​னங்​கள் நிறுத்​தும் வசதி​யுடன் சமு​தாய நலக்​கூடம் அமைக்​கும் பணி நடை​பெறுகிறது. வரும் டிசம்​பருக்​குள் கட்​டு​மானப் பணி​கள் முடிவடை​யும். கொளத்​தூர் தொகு​திக்​குட்​பட்ட பகு​தி​யில் சமு​தாய நலக்​கூடப் பணி தீவிர​மாக நடை​பெறுகிறது.

இதுத​விர, சென்னை பெருநகர வளர்ச்​சிக் குழு​மம் சார்​பில், ரூ.180 கோடி மதிப்​பீட்​டில் பல்​வேறு சமு​தாய நலக்​கூடங்​கள் கட்​டு​மானப் பணி​கள் நடை​பெறுகின்​றன. இதில், வட சென்னை பகு​தி​களில் 11 சமு​தாய நலக்​கூடங்​கள் அமைக்​கப்​படு​கின்​றன. தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு இலவச உணவு வழங்​கும் திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வரும் 15-ம் ​தேதி தொடங்கி வைக்​கிறார். முன்​பெல்​லாம் தூய்​மைப் பணி​யாளர்​கள் உணவு சாப்​பி​டா​மல் 6 மணி நேரம் பணி​யில் ஈடு​படும் சூழல் இருந்​தது.

அவர்​களுக்​காக தனித்​து​வ​மாக இந்த திட்​டத்தை முதல்​வர் கொண்​டுவர உள்​ளார். விக்​டோரியா அரங்​கம் பணி​கள் முடி​யும் நிலை​யில் உள்​ளன. விரை​வில் பயன்​பாட்​டுக்கு திறந்து வைக்​கப்​படும். ஏற்​கெனவே பரு​வ​மழை முன்​னேற்​பாடு பணி​கள் தொடர்ச்​சி​யாக நடை​பெறுகின்​றன. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x