Published : 11 Nov 2025 06:41 AM
Last Updated : 11 Nov 2025 06:41 AM

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 14 பேர் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை மாவட்ட மீனவர்​கள் 14 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்​த​தாகக் கூறி இலங்கை கடற்​படை​யினர் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். மயி​லாடு​துறை மாவட்​டம் பூம்​பு​கார் அருகே வானகிரி மீனவக் கிராமத்​தைச் சேர்ந்த ராமையன் என்​பவருக்கு சொந்​த​மான விசைப்​படகில் கடந்த 3-ம் தேதி ராஜேந்​திரன், சிவ​தாஸ், குழந்​தை வேல், ரஞ்​சித், ராஜ், கலை, குகன், பிர​சாத், அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்கு​மார், தரங்​கம்​பாடி கோவிந்​து, கடலூர் பாரதி ஆகிய 14 மீனவர்​கள் கடலுக்கு மீன்​பிடிக்​கச் சென்​றனர்.

கடந்த 4-ம் தேதி ஜெக​தாப்​பட்​டினம் அருகே கடலில் மீன்​ பிடித்​துக் கொண்​டிருந்​த​போது படகு பழுதடைந்​தது. இதையடுத்​து, அந்த வழி​யாக வந்த பிற மீனவர்​களின் உதவி​யுடன் படகை ஜெக​தாப்​பட்​டினம் கொண்​டு​சென்​று, பழுதுநீக்​கம் செய்த பின்​னர், அங்​கிருந்து கடந்த 8-ம் தேதி மீண்​டும் கடலுக்கு மீன்​பிடிக்​கச் சென்​றுள்​ளனர்.

நேற்று முன்​தினம் நள்​ளிரவு மீண்​டும் படகு பழுதடைந்து கடலில் தத்​தளித்த நிலை​யில், அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர் எல்லை தாண்டி மீன்​பிடித்​த​தாகக் கூறி 14 மீனவர்​களை​யும், படகுடன் கைது செய்​து, இலங்கை மயிலடி மீன்​பிடி துறை​முகத்​துக்கு அழைத்​துச் சென்​றுள்​ளனர். பின்​னர் கைது செய்​யப்​பட்ட 14 பேரை​யும் ஊர்க்​காவல் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி யாழ்ப்​பாணம் சிறை​யில் அடைத்​தனர்.

ஏற்​கெனவே, கடந்த 2-ம் தேதி நாகை மாவட்​டம் நம்​பி​யார் நகர் மற்​றும் அக்​கரைப்​பேட்டை மீனவ கிராமங்​களைச் சேர்ந்த 31 மீனவர்​களை இலங்கை கடற்​படை​யினர் கைது செய்தனர். தற்​போது மேலும் 14 மீனவர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், அவர்​கள் அனை​வரை​யும் விடுவிக்க மத்​திய, மாநில அரசுகள் உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும் என மீனவர்​களின் குடும்​பத்​தினர் வலி​யுறுத்தி உள்​ளனர்.

முதல்வர் கடிதம்: இதற்கிடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நவ.9-ம் தேதி இரவு, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களது படகையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

அந்த வகையில் இதுவரை 128 தமிழக மீனவர்கள் சிறையில் உள்ளனர். 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளன. நீண்டகாலமாக உள்ள இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கண்டு, சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் தேவையான அனைத்து தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண் டும். இ்வ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x