Published : 11 Nov 2025 06:30 AM
Last Updated : 11 Nov 2025 06:30 AM

மேற்கு ஆப்ரிக்கா நாட்டின் மாலியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் கடத்தல்

பேச்சிமுத்து, புதியவன், பொன்னுத்துரை

கோவில்பட்டி: மேற்கு ஆப்​ரிக்​கா​ நாடான மாலியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 தொழிலா​ளர்​கள் தீவிரவா​தி​களால் கடத்​தப்​பட்​டனர். அவர்களை பத்திரமாக மீட்க இந்தியத் தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேற்கு ஆப்​பிரிக்க நாடான மாலி​யில் ஜுன்டா ராணுவ ஆட்சி நடை​பெற்று வரு​கிறது. இங்​குள்ள அல்​-கய்தா மற்​றும் ஐ.எஸ் ஆதரவு தீவிர​வாத அமைப்​பு​கள் ராணுவ அரசுடன் மோதலில் ஈடு​பட்​டுள்​ளன. இதனால் அங்கு வன்​முறை நில​வு​கிறது.

இங்கு 100-க்​கும் மேற்​பட்ட எரிபொருள் வாக​னங்​களுக்கு தீவிர​வா​தி​கள் சமீபத்​தில் தீ வைத்​தனர். கச்சா எண்​ணெய் விநி​யோகத்​துக்​கும் தடை ஏற்​பட்​ட​தால் மாலி நிதி நெருக்​கடி​யில் சிக்​கி​யுள்​ளது. இதனால் அங்​குள்ள பள்​ளி​கள் மூடப்​பட்​டன. மின்​சார உபயோகத்​துக்​கும் கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன.

இதனால் ஆத்​திரம் அடைந்த தீவிரவா​தி​கள், கோப்ரி என்ற இடம் அருகே மின் நிறு​வனத்​தில் பணி​யாற்​றிய தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரை கடத்திச் சென்றனர். இவர்களில் தூத்​துக்​குடி மாவட்​டம் ஒட்​டப்​பி​டாரம் அருகே கொடியன்​குளத்​தைச் சேர்ந்த புதி​ய​வன் (52), நாரைக்​கிணறு பொன்​னுத்​துரை (41), கலப்​பைப்​பட்டி பேச்​சி​முத்து என்ற முத்​து​சாமி (41) ஆகிய மூவரும் கடத்​தப்​பட்​டிருப்​பது நேற்று தெரிய​வந்​தது.

மற்ற இருவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா (36), புதுக்குடி ஊராட்சி கண்மணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தளபதி சுரேஷ் (26) என்று கூறப் படுகிறது நவம்​பர் 6-ம் தேதியே இச்​சம்​பவம் நடை​பெற்ற போதும், தற்​போது​தான் அவர்​களது குடும்​பத்​தினருக்கு தகவல் தெரிய​வந்​துள்​ளது.

அவர்​களை உடனடி​யாக மீட்க பிரதமர் மோடி​யும், முதல்​வர் மு.க.ஸ்​டா​லினும் நடவடிக்கை எடுக்க வேண்​டும், என அவர்​களது குடும்​பத்​தினர் கண்​ணீர் மல்க கோரிக்கை விடுத்​துள்​ளனர். இந்நிலையில் தொழிலாளர்களை மீட்க மாலி​யில் உள்ள இந்​திய தூதரக அதி​காரி​கள் நடவடிக்கை எடுத்து வரு​கின்​றனர்.

இது தொடர்​பாக மாலி அரசு அதி​காரி​கள் மற்​றும் சம்​பந்​தப்​பட்ட மின் நிறு​வனத்​துடன் இந்​திய தூதரக அதி​காரி​கள் ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளனர். இதற்கிடையே, ஒட்​டப்​பி​டாரம் சட்​டப்​பேரவை உறுப்​பினர் எம்​.சி.சண்​முகை​யா, கடத்​தப்​பட்ட தொழிலா​ளர்​களின் குடும்​பத்​தினரை நேரில் பார்த்து ஆறு​தல் தெரி​வித்​தார். தொழிலா​ளர்​களை மீட்க மத்​திய அரசின் உதவி​யுடன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்​கும் என உறுதி தெரி​வித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x