Published : 11 Nov 2025 12:38 AM
Last Updated : 11 Nov 2025 12:38 AM
சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நவ.13-ம்தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கை: மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் நவ.13-ம் தேதி சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படஉள்ளன. அனைத்து மாவட்டச்செயலாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT