Published : 09 Nov 2025 12:29 AM
Last Updated : 09 Nov 2025 12:29 AM

தமிழக அரசு திறக்கவுள்ள குவாரிகளில் மணலுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும்: லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

நாமக்கல்லில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ராஜசேகர். உடன், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர்.

நாமக்கல்: அரசு திறக்​க​வுள்ள குவாரி​களில் மணலுக்கு குறைந்​த​பட்ச விலை நிர்​ண​யம் செய்ய வேண்​டும் என்று தமிழ்​நாடு மணல் லாரி உரிமை​யாளர்​கள் பாது​காப்பு சங்​கம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இந்த சங்​கத்​தின் நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் நாமக்​கல்​லில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் பங்​கேற்ற மாநிலத் தலை​வர் கே.​ராஜசேகர், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சுமார் 75 ஆயிரம் மணல் லாரி​கள் இயங்​கின. கடந்த 2 ஆண்​டு​களாக அரசு மணல் குவாரி​கள் மூடப்​பட்​ட​தால், லாரி உரிமை​யாளர்​கள் பலர் வாங்​கிய கடனை செலுத்த முடி​யாமல் லாரி​களை விற்​பனை செய்​து​விட்​டனர். தற்​போது 50 ஆயிரம் மணல் லாரி​கள் மட்​டுமே உள்​ளன.

இந்​நிலை​யில், நாமக்​கல் மாவட்​டம் நன்​செய் இடை​யாறு உட்பட தமிழகத்​தில் 8 இடங்​களில் மணல் குவாரி​கள் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்​துள்​ளது.

குவாரி​கள் திறக்​கும் முன்​னர் மணல் லாரி உரிமை​யாளர்​கள் மற்​றும் மக்​கள் பிர​தி​நி​தி​களை அழைத்​துப் பேசி, மணலுக்கு குறைந்​த​பட்ச விலை நிர்​ண​யம் செய்து மக்​களுக்கு நேரடி​யாக வழங்க வேண்​டும். ஏற்​கெனவே குறைந்த விலை​யில் எம்​.​சாண்டை பொது​மக்​கள் பயன்​படுத்தி வரு​வ​தால், மணலுக்கு அதிக விலை இருந்​தால் வாங்க முன்​வர​மாட்​டார்​கள். மேலும், குத்​தகை​தா​ரர்​கள் மூலம் 2-வது விற்​பனை​யாக மணல் வழங்​கி​னால், பல்​வேறு முறை​கேடு​களும், விலை​யும் அதி​கரிக்​கும்.

எனவே, ஆன்​லைன் மூலம் பதிவு செய்து நேரடி​யாக மணல் விற்​பனை செய்ய வேண்​டும். அரசி​யல்​வா​தி​களுக்கு முன்​னுரிமை கொடுக்​காமல், பதிவுப் பட்​டியல்​படி மணல் வழங்கவேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்​. பொருளாளர்​ பரமசிவம்​, இணைச்​ செய​லா​ளர்​ சிவக்​கு​மார்​ உடனிருந்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x