Published : 09 Nov 2025 12:12 AM
Last Updated : 09 Nov 2025 12:12 AM

தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு: பிரச்சார வாகன கேமரா பதிவு சிபிஐயிடம் ஒப்படைப்பு

கரூரில் உள்ள சிபிஐ அதிகாரிகளிடம், தவெக பிரச்சார வாகன கேமரா பதிவு, ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு வந்த தவெக வழக்கறிஞர் உள்ளிட்டோர்.

கரூர்: கரூர் துயர சம்​பவம் தொடர்​பாக தவெக பிரச்​சார வாக​னத்​தின் கேமரா பதிவு, ஆவணங்​கள் சிபிஐ அதி​காரி​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

கரூரில் தவெக பிரச்​சா​ரக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர். இது தொடர்​பாக 300-க்​கும் மேற்​பட்​டோருக்கு சம்​மன் அனுப்​பி, விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

தவெக பிரச்​சார வாக​னத்​தில் இருந்த கேமரா பதிவு​கள், நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றவர்​களின் விவரங்​களை அளிக்​கு​மாறு, பனையூரில் உள்ள தவெக அலு​வல​கத்​தில் கடந்த 2-ம் தேதி சிபிஐ அதி​காரி​கள் சம்​மன் அளித்​திருந்​தனர். இதையடுத்​து, கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் தங்​கி​யுள்ள சிபிஐ அதி​காரி​களிடம், சிசிடிவி கேமரா பதிவு​கள் அடங்​கிய வீடியோக்​கள், நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றோரின் விவரங்​கள் அடங்​கிய ஆவணங்​களை தவெக வழக்​கறிஞர் அரசு, பனையூர் அலு​வலக உதவி​யாளர் குருசரண் உள்​ளிட்​டோர் நேற்று ஒப்​படைத்​தனர். தனி​யார் ஆம்​புலன்ஸ் உரிமை​யாளர்​கள், ஓட்​டுநர்​கள் என 20-க்​கும் மேற்​பட்​டோரிடம் கடந்த 3 நாட்​களாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x