Published : 09 Nov 2025 12:09 AM
Last Updated : 09 Nov 2025 12:09 AM

தமிழகத்துக்கு மன்னராட்சி தேவையில்லை: நயினார் நாகேந்திரன்

தருமபுரி: ​பாஜக சார்​பில் தரு​மபுரியில் நடந்த கிராமக் கூட்​டத்​தில் பங்​கேற்ற மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தார்.

அப்​போது, ராஜ​ராஜசோழன் ஆட்​சிக் காலத்​தில் ராஜேந்​திர சோழன் அமைச்​ச​ரா​னார் என்று அமைச்​சர் துரை​முரு​கன் கூறியது குறித்து செய்​தி​யாளர்​கள் கேட்​டனர்.

இதற்கு பதில் அளித்த நயி​னார் நாகேந்​திரன், “அது மன்​ன​ராட்​சி, தற்​போது நடப்​பது மக்​களாட்​சி. அதி​முக​வில் எம்​ஜிஆருக்​குப் பிறகு ஜெயலலி​தா. அவருக்​குப் பிறகு சாதாரண விவ​சாய குடும்பத்தில் பிறந்த பழனி​சாமி என்ற மக்​களாட்சி நிலை​தான் உள்​ளது. ஆனால், திமுக​வில் கருணாநி​தி, ஸ்டா​லின், உதயநிதி ஸ்டா​லின் என ஒரே குடும்​பத்​தினரே முதல்​வர் ஆகிக் கொண்​டிருந்​தால் மக்​களின் நிலை என்​னாவது? மக்​களின் பிரச்​சினை​களைத் தீர்க்க மன்​ன​ராட்சி தேவை​யில்​லை, மக்​களாட்​சி போதும்” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x