Published : 07 Nov 2025 07:04 AM
Last Updated : 07 Nov 2025 07:04 AM

என் மீது சுண்டுவிரல் பட்டாலும் அன்புமணியும், சவுமியாவும்தான் காரணம்: ராமதாஸ் கருத்து

விழுப்புரம்: ‘என் மீது சுண்டு விரல் பட்​டாலும் அதற்​குக் காரணம் அன்​புமணி​யும் சவுமி​யா​வும்​தான்’ என பாமக நிறு​வனர் ராமதாஸ் தெரி​வித்​தார். திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அன்​புமணியை மத்​திய சுகா​தா​ரத் துறை அமைச்​ச​ராக்​கியது மற்​றும் பாமக தலை​வ​ராக்​கியது என அரசி​யலில் இரு தவறுகளை செய்து விட்​டேன்.

அமை​தி​யாக பாமகவை நடத்தி கொண்​டிருந்த நிலை​யில், ஒரு பிளவு ஏற்​பட்​டிருக்​கிறது என மக்​களும், பிற கட்​சி​யினரும் நினைக்கும் அளவுக்கு அன்​புமணி​யின் பேச்​சும், செயலும் அரு​வருக்​கத்​தக்க வகை​யில் உள்​ளது. 5 எம்​எல்​ஏக்​களில் என்​னுடன் இரு​வர் உள்ளனர்.

அன்​புமணி கும்​பலிடம் 3 பேர், தெரி​யாமல் சென்​று​விட்​டனர். நான் நடத்​திய போராட்​டங்​களில் வன்​முறை இருக்​காது. எங்​களை விமர்​சித்​தவர்​களுக்​குக்​கூட நாகரி​க​மாகப் பதில் சொல்​வோம். ஆனால், என்​னைப் பற்​றி​யும், ஜி.கே.மணி​யைப் பற்​றி​யும் சமூக வலை​தளங்​களில் கேவல​மாக பேசுவதற்கு அன்​புமணி தூண்டி விடு​கிறார். கத்​தி, வீச்​சரி​வாள் வைத்​திருக்​கும் அன்​புமணி கும்​பல், துப்​பாக்​கியை எப்​போது ஏந்​து​வார்​கள் என தெரிய​வில்​லை.

வன்​முறை​யுடன் அன்​புமணி பேசுவ​தால், அதை செய்து பார்க்க வேண்​டும் என அவருடன் இருப்​பவர்​கள் கத்​தியை எடுக்​கின்​றனர். ஒரு கும்​பலை வைத்​து​க்கொண்​டு, அது​தான் கட்சி என்று அன்​புமணி சொல்லி வரு​கிறார். தமிழகம் அமைதி பூங்​கா​வாகத் திகழ வேண்​டும் என்று நண்​பர் கருணாநிதி அடிக்​கடி கூறு​வதுண்​டு.

கத்​தியை வைத்​துக்​கொண்டு கொலை மிரட்​டல் விடுப்​பது சரி​யில்​லை. எந்த நிலை​யிலும் எதிர்​வினை​ யாற்​றக் கூடாது என என் பாமக சொந்​தங்​களை கேட்​டுக்​கொள்​கிறேன். என் மீது சுண்டு விரல் பட்​டாலும் அன்​புமணி​யும், சவுமி​யா​வும்​தான் காரணம். அன்​புமணி​யும், அவரது கும்​பலும் திருந்த வேண்​டும். ‘தர்​மத்​தின் வாழ்​வுதனை சூது கவ்​வும், இறு​தி​யில் தரு​மமே வெல்​லும்.’

பாமக பொதுக்​குழு கூட்​டம் டிச.30-ம் தேதி தலை​வாசலில் நடை​பெற உள்​ளது. இக்​கூட்​டத்​தில் தேர்​தல்​ கூட்​டணி மற்​றும்​ கட்​சி​யின்​ வளர்​ச்​சி குறித்​து கருத்​து கேட்​கப்​பட்​டு, முடி​வெடுக்​கப்​படும்​. இவ்​​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x