Published : 06 Nov 2025 07:20 AM
Last Updated : 06 Nov 2025 07:20 AM

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா: திமுக கூட்டணி கட்சிகளுக்கு தமிழிசை அழைப்பு

சென்னை: வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா​வில் திமுக, கூட்​டணி கட்​சி​யினர் கலந்​து​கொண்டு வந்தே மாதரம் பாடலை பாட வேண்​டும் என்று தமிழிசை சவுந்​தர​ராஜன் அழைப்பு விடுத்​துள்​ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலு​வல​க​மான கமலால​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை கொண்​டாட வேண்​டும் என்று சமீபத்​தில் நடந்த ‘மன் கி பாத்’ நிகழ்​வில் பிரதமர் மோடி அறி​விப்பு வெளி​யிட்​டிருந்​தார்.

நவ.7, 8-ல் பிரம்மாண்ட விழா: அதையொட்​டி, நவ.7, 8-ம் தேதி​களில் மிகப் பிரம்​மாண்​ட​மான விழாக்​களை நடத்த இருக்​கிறோம். குறிப்​பாக, பாரத தேசத்தை சேர்ந்​தவர்​கள் அனை​வரை​யும் தேசிய ஒரு​மைப்​பாடு என்ற ஒரே குடை​யின் கீழ் ஒன்​றிணைக்க வேண்​டும் என்​ப​தற்​காக இந்த நிகழ்​வில் நாங்​கள் தேசி​யக் கொடியை பயன்​படுத்​தப் போகிறோம். இதில், அனைத்து கட்​சி​யினரும் கலந்​து​கொள்ள வேண்​டும். குறிப்​பாக திமுக, கூட்​டணி கட்​சி​யினர் கலந்​து​ கொண்டு வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்​டும்.

சேலத்​தில் மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், செஞ்சி கோட்​டை​யில் சுதாகர் ரெட்​டி, சிவகங்​கை​யில் ஹெச்​.​ராஜா, வேலூரில் நானும் கலந்து கொள்​கிறோம். பாஜக ஆளும் மாநிலங்​களில் இது அரசு விழா​வாக கொண்​டாடப்பட இருக்​கிறது. தமிழக அரசும் இதை அரசு விழா​வாக அறிவிக்க வேண்டும்.

உண்​மை​யான காங்​கிரஸ்​காரர்​களாக இருந்​தால் கூட்​டணி கட்சி தலை​வ​ரான ஸ்டா​லினிடம் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழாவை அனைத்து பள்​ளி​களி​லும் கொண்​டாட வேண்​டும், அரசு விழா​வாக அறிவிக்க வேண்​டும் என செல்​வப்​பெருந்​தகை அறை​கூவல் விட​வேண்​டும். தமிழகத்​தில் ஒரு பெண், தோழனோடு இருந்​தால்​கூட அடித்து விரட்​டி, பாலியல் வன்​கொடுமை செய்​யப்​படு​கிறார்.

தமிழகத்​தி​லும் ஒரு சுதந்​திரப் போராட்​டத்தை நடத்த வேண்​டிய நிலை​யில் பெண்​கள் இருக்​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார். மாநில துணைத் தலைவர் சக்​கர​வர்த்​தி, செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x