Published : 06 Nov 2025 07:14 AM
Last Updated : 06 Nov 2025 07:14 AM

மகளிரை ஏமாற்றுவதுதான் உரிமைத் தொகை திட்டமா? - நயினார் நாகேந்திரன் கேள்வி

சென்னை: தமிழக மகளிரை ஏமாற்​று​வது​தான் உரிமைத் தொகை திட்​டமா என்று பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகை கோரி பெறப்​பட்ட 49,429 மனுக்​களில், 19,290 மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்​டது கவலை​யளிக்​கிறது. ‘விடு​பட்​டோர் எல்​லோருக்​கும் கண்​டிப்​பாக மகளிர் உரிமைத் தொகை வழங்​கப்​படும்’ என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் அறி​வித்த 2 நாட்​களுக்​குள்​ளேயே திமுக அரசின் சாயம் வெளுத்​து​விட்​டது.

இப்​படி ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் ‘தகு​தி​யற்​றவர்​கள்’ என்ற போர்​வை​யில், சுமார் 40 சதவீத மனுக்​களை நிராகரித்​து, நாலாபுற​மும் விளம்​பரம் மட்​டும் வெளி​யிட்​டு, மகளிரை ஏமாற்​று​வது​தான் உரிமைத் தொகை திட்​ட​மா? ஏற்​கெனவே ஆட்​சிப் பொறுப்​பேற்று 28 மாதங்​களுக்கு இத்​திட்​டத்தை கிடப்​பில் போட்​டனர்.

தங்​கள் கணக்​குப்​படி ‘தகு​தி​யான’ மகளிர் ஒவ்​வொரு​வருக்​கும் ரூ.28 ஆயிரத்தை தராமல் ஏமாற்​றினர். நாள்​தோறும் மனு கொடுக்க கால்​கடுக்க நிற்​க​வைத்து அலைக்​கழித்​தனர். இதெல்​லாம் போதாதென்​று, மேடைதோறும் ஒரு போலி அறி​விப்பை வேறு வெளி​யிட்டு வஞ்​சிப்​பது ஏன்? எளியோரை ஏமாற்​றிக் களித்​தோருக்கு ஏமாற்​றமே மிஞ்​சும். வெற்று அறி​விப்​பு​கள் மூலம், மகளிரை நம்​ப​வைத்து ஏமாற்​றிய பாவம் திமுக அரசை அழிவை நோக்கி இட்​டுச் செல்​லும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x