Published : 06 Nov 2025 06:41 AM
Last Updated : 06 Nov 2025 06:41 AM

பரந்தூர் விமான நிலையத்துக்காக விவசாயிகளை மிரட்டி இதுவரை 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூரில் அமைய உள்ள சென்னை 2-வது பசுமை வெளி விமான நிலை​யத்துக்​காக இது​வரை 1,000 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இந்​தச் சூழ்​நிலை​யில், விவ​சா​யிகளை மிரட்டி நிலம் கையகப்​படுத்​தும் பணி​கள் நடை​பெறு​வ​தாகப் பரந்​தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்​டக் குழு குற்​றம்​சாட்டி உள்​ளது.

பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டத்​துக்​காக 5,746 ஏக்​கர் நிலம்கையகப்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதில் நீர் நிலைகள், அரசு புறம்​போக்கு நிலங்​கள், விவ​சா​யிகளின் விவ​சாய நிலங்​கள், வீடு​கள் கையகப்​படுத்​தப்பட உள்​ளன. முதல்​கட்​ட​மாக அதி​காரி​கள் பல்​வேறு முயற்​சிகளுக்​குப் பிறகு 1,000 ஏக்​கர் நிலத்​தைக் கையகப்​படுத்​தி​யுள்​ளனர்.

இந்த நிலம் வழங்​கிய விவ​சா​யிகளுக்கு ரூ.400 கோடி வரை இழப்​பீடும் வழங்​கப்​பட்​டு​விட்​டது. விவ​சா​யிகளுக்கு ஏக்​கருக்கு ரூ.35 லட்​சம் முதல் ரூ.2.57 கோடி வரை இழப்​பீடு வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்த விமான நிலை​யத்​துக்கு எதி​ராக விவ​சா​யிகள் போராட்​டம் நடத்தி வரும் நிலை​யில், இந்த நிலங்கள் கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.இது மக்​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து போராட்​டக் குழு​வின் செயலர் சுப்​பிரமணி செய்​தி​யாளர்​களிடம் கூறியது: விவ​சா​யிகள் தாமாக முன்​வந்து நிலங்​களைக் கொடுத்​தனர் என்ற ஒரு தோற்​றத்தை அரசு திட்​ட​மிட்டு உரு​வாக்கி வரு​கிறது. முதலில், முதலீட்டு நோக்​கில் நிலம் வாங்​கிப் போட்​டிருந்த வெளியூர் விவ​சா​யிகளை மிரட்டி நிலங்​களைப் பதிவு செய்​தனர். அடுத்த கட்​ட​மாக, உள்​ளூர் விவ​சாயிகளை அழைத்​துப் பேச்​சு​வார்த்தை என்ற பெயரில் அச்​சுறுத்தி வரு​கின்​றனர்.

அதி​காரி​கள் ஒருபடிமேலே சென்​று, `உங்​கள் இழப்​பீட்​டுப் பணத்​தைப் பெற்​றுக் கொண்டு நிலத்​தைக் கொடுக்க மறுத்​தால், அந்​தத் தொகையை நீதி​மன்​றத்​தில் கட்​டி​விட்​டு, உங்​கள் நிலத்​தைச் சுற்றி வேலி போட்​டு​விடு​வோம். பிறகு நீங்​கள் வழக்​கில் போராடிப் பெற வேண்​டியது​தான்' என்று கூறுகின்​றனர்.

இந்த அழுத்​தத்​தின் காரண​மாகவே சில விவ​சா​யிகள் நிலத்​தைப் பதிவு செய்ய வேண்​டிய கட்​டா​யத்​துக்​குத் தள்​ளப்​பட்​டுள்ளனர். எங்​களது வாழ்​வா​தா​ர​மானவிளை நிலங்​களை​யும், நீர்​நிலைகளை​யும் அழிக்​கும் இத்​திட்​டத்தை எதிர்த்​து, மக்​கள் போராட்​டத்​துடன் சட்​டப் போராட்​ட​மும் தொடரும். ஏற்​கெனவே ஏரிப் பாசன விவ​சா​யிகள் சங்​கம் சார்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை, விரை​வில் உயர் நீதி​மன்​றத்​தில் பொது நல வழக்​காக மாற்​றி தாக்​கல் செய்ய உள்​ளோம். எங்​கள் போராட்​டம் வெற்றி பெறும் வரை ஓயாது" என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x