Published : 05 Nov 2025 05:55 AM
Last Updated : 05 Nov 2025 05:55 AM
சென்னை: மதுரவாயல் அடுத்த மேட்டுக்குப்பம், ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் சபாநாயகம் (38). இவரது மகன் லக்சன் (9). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற போது, தெருவில் சுற்றி திரிந்து கொண்டிருந்த நாய் ஒன்று சிறுவன் லக்சனை கடித்து குதறியது.
இதில், சிறுவனுக்கு முதுகு மற்றும் வலது கை, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT