Published : 05 Nov 2025 06:18 AM
Last Updated : 05 Nov 2025 06:18 AM

பாமக எம்எல்ஏ அருள் காரை வழிமறித்து தாக்கிய கும்பல்: அன்புமணி தூண்டுதலே காரணம் என புகார்

சேலம் / சென்னை: சேலம் அருகே பாமக எம்​எல்ஏ அருள் மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் வந்த காரை வழிமறித்து கும்​பல் தாக்கிய​தில் 6 பேர் காயமடைந்​தனர். அன்​புமணியின் தூண்​டு​தலின்​பேரிலேயே தாக்​குதல் நடந்​துள்​ள​தாக அருள் புகார் தெரி​வித்துள்ளார். சேலம் மேற்கு தொகுதி பாமக எம்​எல்​ஏ​வான அருள், ராம​தாஸின் தீவிர ஆதர​வாளர். இதனால், அன்​புமணி​யின் ஆதர​வாளர்​கள் கொலை மிரட்​டல் விடுப்​ப​தாக அருள் ஏற்​கெனவே புகார் தெரி​வித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், பாமக ஒன்​றியச் செய​லா​ளர் வடு​கநத்​தம்​பட்டி சத்​ய​ராஜின் தந்தை தர்​ம​ராஜ் உயி​ரிழந்த நிலை​யில், துக்​கம் விசா​ரிப்​ப​தற்​காக அருள் எம்​எல்ஏ, தனது ஆதர​வாளர்​களு​டன் நேற்று சென்​றார். பின்​னர், 5-க்​கும் மேற்​பட்ட கார்​களில் அவர்​கள் சேலம் புறப்​பட்​டனர். வாழப்​பாடி அருகே சென்​ற​போது, திடீரென ஒரு கும்​பல் கார்​கள் மீது கற்​களை வீசித் தாக்​கியது. கார்​களை நிறுத்​தி​யதும், அந்த கும்​பலைச் சேர்ந்​தவர்​கள் கார் கண்​ணாடிகளை உருட்​டுக் கட்​டை​யால் உடைத்​தனர்.

அப்​போது அருள் ஆதர​வாளர்​களுக்​கும், அந்த கும்​பலுக்​கும் மோதல் ஏற்​பட்​டது. ஒரு​வரை யொரு​வர் தாக்​கிக் கொண்​டனர். தகவலறிந்து போலீ​ஸார் வந்​தவுடன், அந்த கும்​பல் அங்​கிருந்து சென்றுவிட்​டது. இதில், அருளின் ஆதர​வாளர்​களான பாமக மாவட்​டச் செய​லா​ளர் நடராஜ், தலை​வர் ராஜ​மாணிக்​கம், ஒன்​றியச் செய​லா​ளர் ஆனந்த், இளைஞரணி நிர்​வாகி​கள் விஜி, மணி​கண்​டன், ஸ்ரீரங்​கம் ஆகியோர் பலத்த காயமடைந்​து, சேலம் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர்.

இது தொடர்​பாக டிஎஸ்பி சுரேஷ்கு​மார் தலை​மையி​லான போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். இது தொடர்​பாக சேலம் எஸ்​.பி. அலு​வல​கத்​தில் அருள் புகார் அளித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அன்​புமணி​யின் ஆதர​வாளர்​களான மாவட்​டச் செய​லா​ளர் ஜெயப்​பிர​காஷ் உள்​ளிட்ட 15 பேர் எங்​களைத் தாக்​கினர்.

தொண்​டர்​கள் என்​னைச் சுற்றி நின்று பாது​காத்​தனர். `உன்​னைக் கொல்​லாமல் விட​மாட்​டோம்' என அக்​கும்​பல் மிரட்​டியது. இது தொடர்​பாக ஜெயப்​பிர​காஷ் உள்​ளிட்​டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். அன்​புமணி தூண்​டு​தல் பேரில்​தான் இந்த தாக்​குதல் நடை​பெற்​றுள்​ளது. முதல் குற்​ற​வாளி அன்​புமணி​தான். இவ்​வாறு அவர் கூறி​னார்.

ராமதாஸ் கண்டனம்: ​பாமக நிறு​வனர் ராம​தாஸ் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​இருப்​ப​தாவது: பாமக எம்​எல்ஏ அருள் மீது கொலை​வெறித் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளனர். கருத்​தை, கருத்​தால் எதிர்​கொள்​ளாமல், ஜனநாயகத்​துக்கு எதி​ரான தாக்​குதல் நடத்​தி​யது கடும் கண்​டனத்​துக்​குரியது.

சில நாட்​களாக சேலம், அரியலூர், தரு​மபுரி, தஞ்சை மாவட்​டங்​களில் அன்​புமணி பலரைத் தூண்​டி​விட்​டு, என்​னை​யும், முக்​கியப் பொறுப்​பாளர்​களை​யும் அவமானப்​படுத்​தும் வகை​யில் அவதூறு பரப்​பி, வன்​முறையைத் தூண்​டி​விட்டு மோதலை உரு​வாக்கி வரு​கிறார். எனவே, அன்​புமணி​யின் கும்​பலை கைது செய்​து, சட்​டத்​தின் முன் நிறுத்​தவேண்​டும் என்று காவல் துறையை கேட்​டுக்​கொள்​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

அருளை கைது செய்ய வேண்டும்: பாமக செய்​தித் தொடர்​பாளர் வழக்​கறிஞர் பாலு வெளி​யிட்ட அறிக்​கை​யில், “பாமக​வில் இருந்து அருள் நீக்​கப்​பட்​ட​திலிருந்தே பாமக​வினர் மீது தாக்​குதல் நடத்​து​வது, பொது அமை​தியை குலைப்​பது, வன்​முறையைத் தூண்​டும் வகை​யில் சமூக வலைத்​தளங்​களில் பதி​விடு​வது போன்​றவற்​றில் அருள் ஈடு​பட்டு வரு​கிறார். எனவே, சேலம் அருளை​யும், அவரது கூட்​டாளி​களை​யும் உடனடி​யாக கைது செய்ய வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

நீதிமன்றத்தில் முறையீடு: இந்​நிலை​யில், சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா முன்​னிலை​யில் ஆஜரான எம்​எல்ஏ அருள் தரப்பு வழக்​கறிஞர்​கள், “கொலை வெறித் தாக்​குதலுக்கு காரண​மான அன்​புமணி மீதும் வழக்​குப் பதிவு செய்​யு​மாறு போலீ​ஸாருக்கு உத்​தர​விட வேண்​டும்” என்று முறை​யீடு செய்​தனர். அதையடுத்​து, “இதை மனு​வாக தாக்​கல் செய்​தால் விசா​ரிக்​கப்​படும்” என்று நீதிபதி தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x