Published : 05 Nov 2025 06:28 AM
Last Updated : 05 Nov 2025 06:28 AM

தாம்பரம் - விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை எழும்​பூர் - விழுப்​புரம் மார்க்​கத்​தில் திண்​டிவனம் யார்​டில் பொறி​யியல் பணி நடக்​க​வுள்​ள​தால், தாம்​பரம் - விழுப்​புரம் மெமு பாசஞ்​சர் ரயில் சேவை​யில் இன்று (நவ.5) மற்​றும் நவ.8-ம் தேதி மாற்​றம் செய்​யப்பட உள்​ளது.

அதன் விவரம்: தாம்​பரம் - விழுப்​புரத்​துக்கு நவ. 5, 8 ஆகிய தேதி​களில் காலை 9.45 மணிக்கு புறப்​படும் மெமு பாசஞ்​சர் ரயில், ஒலக்​கூர் - விழுப்​புரம் இடையே பகுதி ரத்து செய்​யப்பட உள்​ளது.

விழுப்​புரம் - சென்னை கடற்​கரைக்கு மேற்​படி நாட்​களில் மதி​யம் 1.40 மணிக்கு புறப்பட வேண்​டிய மெமு பாசஞ்​சர் ரயில், விழுப்புரம் - ஒலக்​கூர் இடையே பகுதி ரத்து செய்​யப்பட உள்​ளது. இத்​தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x