Published : 05 Nov 2025 06:22 AM
Last Updated : 05 Nov 2025 06:22 AM

ஆசிரியர்கள், பணியாளர்கள் மீதான போக்சோ வழக்குகள் விசாரணையை விரைவுபடுத்த அமைச்சர் உத்தரவு

சென்னை: ஆசிரியர்​கள், பணி​யாளர்​கள் மீதான போக்சோ வழக்​கு​களில் விரைந்து விசா​ரணை நடத்தி முடிக்க வேண்​டுமென அலுவலர்​களுக்​கு, அமைச்​சர் அன்​பில் மகேஸ் உத்​தர​விட்​டுள்​ளார். தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை​யின் அலு​வல் ஆய்​வுக் கூட்​டம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி தலை​மை​யில், சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் துறை ​சார்ந்த இயக்​குநர்​கள், முதன்​மை, மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் கலந்து கொண்​டனர். கூட்​டத்​தில் அரசின் நலத்திட்டங்​கள், பொதுத்​தேர்வு மற்​றும் பரு​வ​மழை கால முன்​னேற்​பாடு​கள் உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​கள் தொடர்​பாக விவாதிக்கப்பட்டது.

அதன்​பின், அமைச்​சர் அன்​பில் மகேஸ் பேசி​ய​தாவது: பொதுத்​தேர்வு தேதி​கள் அறிவிக்​கப்​பட்​டு​விட்​ட​தால், உரிய காலத்​துக்​குள் பாடப்​பகு​தி​களை திட்​ட​மிட்டு நடத்தி முடிக்க வேண்​டும். மழைக்​கால முன்​னெச்​சரிக்கை வழி​காட்​டு​தல்​களை பின்​பற்றி நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்.

ஓய்​வு​பெற்ற அலு​வலர்​கள், ஆசிரியர்​கள், பணி​யாளர்​களுக்கு உரிய பணப் பலன்​களை உரிய காலத்​தில் வழங்க வேண்​டும். கற்​றல் அடைவுத் தேர்​வில் பெற்ற மாவட்ட தேர்ச்சி அறிக்​கையை ஆய்வு செய்து பின்​தங்​கிய பள்​ளி​கள் மீது கவனம் செலுத்தி கற்​பித்​தலை மேம்​படுத்த வேண்​டும்.

அதே​போல், மாணவர்​கள் இடைநிற்​றலை கண்​காணித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்​டும். ஆசிரியர்​கள், பணி​யாளர்​கள் மீதான போக்சோ வழக்​கு​களில் விரைந்து விசா​ரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்​க வேண்​டும்.

நீண்​ட​காலம் நிலு​வை​யில் உள்ள 17ஏ, 17பி குற்​றச்​சாட்​டு​கள் மீது உரிய வழி​முறை​களை பின்​பற்றி விசா​ரணை மேற்​கொண்டு இறுதி ஆணை பிறப்​பிக்க வேண்​டும். தங்​கள் மாவட்​டப் பள்​ளி​கள் சார்ந்த செய்​தி​கள், புகார்​களை உடனுக்​குடன் கவனித்து உரிய குறைதீர் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x