Published : 05 Nov 2025 06:06 AM
Last Updated : 05 Nov 2025 06:06 AM

தலைமுடி ஏற்றுமதியில் சட்ட விரோத பணப்பரிமாற்றம்: 4 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

நுங்கம்பாக்கம் மேத்தா நகரில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்திய தொழிலதிபர் வீடு. | படம்: எல்.சீனிவாசன் |

சென்னை: தமிழகத்​தில் பல்வேறு வழி​பாட்​டுத் தலங்​களில் வேண்​டு​தல்​களை நிறைவேற்ற பக்​தர்​கள் தங்​களது தலை​முடியை காணிக்​கை​யாக செலுத்​து​வது வழக்கம். இந்த தலை​முடியை மொத்​த​மாக பெறு​வதோடு, வேறு வழிகளி​லும் தலை​முடியை பெற்று சில தொழில் அதிபர்​கள், அவர்​களது நிறு​வனம் மூலம் வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​கின்​றனர். இதன் மூலம் அவர்​களுக்கு அதிக வரு​மானம் கிடைக்​கிறது.

இந்த தலை​முடி உலகள​வில்விக், ஹேர் எக்​ஸ்​டென்​ஷன் உள்​ளிட்ட பல்​வேறு வகை​யான சிகை அலங்​காரங்​களுக்கு பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. சிகை அலங்​காரங்​கள் தயாரிக்க வெளி​நாட்டு நிறு​வனங்​கள் பயன்​படுத்​தும் மனித தலை​முடி பெரும்​பாலும் இந்​தி​யா​விலிருந்து செல்​வ​தாக கூறப்​படு​கிறது.

இது ஒரு​புறம் இருக்க, அதிக வரு​மானம் கிடைப்​ப​தால் தலை​முடி இந்​தி​யா​விலிருந்து சட்ட விரோத​மாக கன்​டெய்​னர் லாரி​களில் எடுத்​துச் செல்​லப்​பட்டு மியான்​மர், வங்​கதேசம் மற்​றும் நேபாளம் வழி​யாக சீனா​வுக்கு கடத்​தப்​பட்​டு, அங்​குள்ள நிறு​வனங்​கள் இந்த முடியை பயன்​படுத்தி விக் தயாரித்து தங்​களது பிராண்​டு​களின் பெயரில் அவற்றை விற்​பனை செய்து பெரும் லாபம் ஈட்​டு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது.

அசாம் தலைநகர் குவஹாட்​டியை மைய​மாகக் கொண்டு இந்த சட்​ட​விரோத செயல்​கள் நடப்​பதை அறிந்த அம்​மாநில அமலாக்​கத் துறை அதி​காரி​கள் இதுகுறித்து தீவிர விசா​ரணை மேற்​கொண்​டனர். விசா​ரணை​யில் தலை​முடி மூலம் கோடிக்​கணக்​கில் சட்​ட​விரோத பணப் பரி​மாற்​றம் நடந்​திருப்​பதும், கோயில்​களில் இருந்து தலை​முடியை சேகரிக்​கும் நிறு​வனங்​கள் போலி நிறு​வனங்​களை உரு​வாக்கி கன்​டெய்​னர் லாரி​கள் மூலம் கடத்தி இந்த மோசடியை அரங்​கேற்றி இருப்​பதும் தெரிய​வந்​தது.

அமலாக்​கத் துறை விசா​ரணை​யின் போது தலை​முடியை மொத்​த​மாக வாங்கி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்து வரும் சென்னை கோடம்​பாக்​கத்தை சேர்ந்த வெங்​கடேசன் என்​பவருக்​கும் இந்த சட்​ட​விரோத பணப்பரி​மாற்​றத்​தில் தொடர்பு இருப்​ப​தாக​வும் தகவல் வெளி​யானது.

இதைத் தொடர்ந்து சென்னை கோயம்​பேடு, நெற்​குன்​றத்​தில் விக் ஏற்​றுமதி நிறு​வனம் நடத்​திவரும் லோகேஷ்வரன் என்​பவரது குடி​யிருப்பு மற்​றும் அலு​வல​கம், அமைந்​தகரை மேத்தா நகரில் டிராவல்ஸ் நிறு​வனம் நடத்​திவரும் முனு​சாமி வெங்​கடேசன் என்​பவரின் குடி​யிருப்​பு, கோடம்​பாக்​கம் வெள்​ளாளர் தெரு​வில் விக் ஏற்​றுமதி நிறு​வனம் நடத்​திவரும் வெங்​கடேசன் என்​பவர் வசித்து வரும் குடி​யிருப்பு, அதே பகு​தி​யில் உள்ள மற்​றொரு குடி​யிருப்​பிலும் சோதனை நடை​பெற்​றது. சோதனை​யில் முக்​கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்ளன.

இதுகுறித்து அமலாக்​கத் துறை அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “முழு​மை​யான சோதனைக்கு பிறகே எந்த மா​திரி​யான ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்டன என்​பது குறித்து விரி​வான அறிக்கை வெளி​யிடப்​படும்​” என்​று தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x