Published : 05 Nov 2025 07:24 AM
Last Updated : 05 Nov 2025 07:24 AM

வாக்காளர் பட்டியலில் தவறு நடக்காமல் தடுப்பது திமுகவின் கடமை: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

​வாக்​காளர் பட்​டியல் தவறு​தலாக வந்​து​வி​டா​மல் தடுக்க வேண்​டிய கடமை ஆளும் கட்​சி​யான திமுக​வுக்கு இருப்​ப​தாக புதிய தமி​ழ​கம் கட்சி தலை​வர் டாக்​டர் கிருஷ்ண​சாமி தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக நேற்று கோவில்​பட்​டி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நவம்​பர் 4-ம் தேதி முதல் சிறப்பு தீவிர வாக்​காளர் திருத்​தப் பணி​கள் (எஸ்​ஐஆர்) மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. பிஹாரில் இப்​பணியை மேற்​கொள்​ளும் போது, லட்​சக்கணக்​கான வாக்​காளர்​கள் விடு​பட்​டுள்​ளனர். தமி​ழ​கத்​தில் மேற்​கொள்​ளப்​படும் எஸ்​ஐஆர் பணி​கள் எந்​த​வித​மான குற்​றச்​சாட்​டு​களுக்​கும் இடமின்றி நேர்​மை​யாக நடை​பெற வேண்​டும். அதேசம​யம், டிசம்​பர் 4-ம் தேதிக்​குள் பல கோடி வாக்​காளர்​களின் அனைத்து தரவு​களை​யும் சரி​பார்த்து எப்​படி இந்த பட்​டியல் தயா​ரிக்​கப்​படும் என்​பது கேள்விக்​குறி​யாக உள்​ளது.

கிரா​மங்​களில் மக்​கள் காலை​யிலேயே பணி​களுக்​குச் சென்​று​விடு​வார்​கள். அப்​படி இருக்​கும் போது ஒரு மாத காலத்​தில் 6 கோடிக்​கும் மேற்​பட்ட வாக்​காளர்​களை எப்​படி தேர்​தல் ஆணை​யத்​தால் நியமிக்​கப்​பட்ட அதி​காரி​கள், சந்​தித்து அவர்​கள் வழங்​கும் படிவங்​களை பூர்த்​தி​செய்து கொடுப்​பார்​கள் என்று தெரிய​வில்​லை.

படிவங்​களை பூர்த்தி செய்​யும்​போது, அதற்​குரிய ஆவணங்​களை​யும் இணைக்க வேண்​டும் என கூறுகின்​ற​னர். படிவம் பூர்த்தி செய்​யப்​பட​வில்லை என்​றால் வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்​கப்பட மாட்​டாது என தெரி​வித்​துள்​ளனர். இதனால் தமி​ழ​கத்​தில் பாதி வாக்​காளர்​களை சேர்ப்​பதே கடின​மாகி​விடும். நல்ல நோக்​கத்​துக்​காக எடுத்த முயற்​சி​யின் போது தவறு நடந்​தால் பல வாக்​காளர்​கள் விடு​பட்​டுப் போவார்​கள். இதனால் தேர்​தல் நேரத்​தில் மிகப்​பெரிய போராட்​டம் வெடிக்​கும். ஆகவே, தேர்​தல் ஆணை​யம் இதைக் கவனத்​துடன் மேற்​கொள்ள வேண்​டும்.

குறைந்​தது 2 மாத கால அவகாசம் கொடுத்து அனைத்து குக்​கி​ரா​மங்​களி​லும் முகாம் நடத்த வேண்​டும். சத்​துணவு பணி​யாளர்​கள், அங்​கன்​வாடி பணி​யாளர்​களால் இப்​பணி​களை செய்ய முடி​யாது. அதனால் மத்​திய - மாநில அரசு ஊழியர்​களை இதில் பயன்​படுத்​தி​னால் தான் குறைந்​த​பட்​சம் 90 முதல் 95 சதவீதம் வரை துல்​லிய​மாக வாக்​காளர் பட்​டியல் தயா​ரிக்க முடி​யும்.

திமுக தொடங்​கப்​பட்டு 76 ஆண்​டு​களாகிறது. தமிழ்​நாட்​டில் திமுக தான் ஆட்​சி​யில் உள்​ளது. அவர்​களிடம் ஆட்சி இயந்​திர​மும் கட்சி இயந்​திர​மும் இப்​போது உள்​ளது. எனவே, வாக்​காளர் பட்​டியல் தவறு​தலாக வந்​து​வி​டா​மல் தடுக்க வேண்​டிய ஜனநாயகக் கடமை திமுக-வுக்கு இருக்​கிறது.இவ்​வாறு அவர் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x